rtjy 300 scaled
உலகம்செய்திகள்

காசாவில் குண்டுவீச்சை தீவிரப்படுத்திய இஸ்ரேல்

Share

காசாவில் குண்டுவீச்சை தீவிரப்படுத்திய இஸ்ரேல்

விமானத் தாக்குதல் மூலம் காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் குண்டுவீச்சை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தரைவழித் தாக்குதலுக்கு உதவியாக காசா நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் விமானங்கள் கடந்த 24 மணி நேரத்தில் குண்டுவீச்சை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வான்வழித் தாக்குதல் மட்டுமின்றி, காசாவுக்குள் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் இராணுவம் ஆயத்தமாக உள்ளதாக தெரியவருகிறது.

ஹமாஸ் நடத்திய கொடூரத் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் இராணுவம், இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 18 நாட்களாக காஸா முழுவதும் தீவிர வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது.

ஹமாஸ் அமைப்பைக் குறிவைத்து காசா பகுதியில் தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் இராணுவம் கூறினாலும், அதன் குண்டுவீச்சில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

காசா பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 704 பேர் உயிரிழந்ததாக அப்பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை 2,360 சிறுவர்கள் உட்பட மொத்தமாக 5,791 உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 2
செய்திகள்விளையாட்டு

ஒருநாள் தொடர்: டக்வத் லூயிஸ் முறையில் ஆஸ்திரேலியா அபார வெற்றி.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில், டக்வத் லூயிஸ் முறைப்படி (D/L Method)...

1760884555 Paris Louvre Museum Sri Lanka 6
செய்திகள்உலகம்

உலகப் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் திருட்டு: பாரிஸில் அருங்காட்சியகம் மூடல்!

பாரிஸில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான, உலகப் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் (Louvre Museum) திருட்டுச்...

IMG 20251018 WA00431 vb 16
செய்திகள்இந்தியா

கரூர் உயிரிழப்பு: 41 குடும்பங்களுக்கு நிவாரணம் அனுப்பிய விஜய்! 

கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் பிரசாரக் கூட்டத்தில்...

25 68f5bd64c9d96
செய்திகள்இலங்கை

ஓரியோனிட்ஸ் விண்கல் மழை இன்று இரவு இலங்கை வான்பரப்பில் காண வாய்ப்பு!

இலங்கையின் வான் பரப்பிலும் இன்று (அக்டோபர் 20) இரவு விண்கல் மழை பொழிவைப் பார்வையிட மக்களுக்கு...