tamilni 305 scaled
உலகம்செய்திகள்

பாலஸ்தீன மக்களின் விதி இஸ்ரேல் கையில் இல்லை! அமைச்சர் ரியாத் அல் மலிக்கி காட்டம்

Share

பாலஸ்தீன மக்களின் விதி இஸ்ரேல் கையில் இல்லை! அமைச்சர் ரியாத் அல் மலிக்கி காட்டம்

பாலஸ்தீன மக்களின் தலைவிதி இஸ்ரேலின் கையில் இல்லை என அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாத் அல் மலிக்கி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஹமாஸ் போர் 18வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த போரில் மொத்தமாக 7000 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் நடந்த தாக்குதலில் இதுவரை 96 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் இந்தப் போரில் பலியானோர் எண்ணிக்கை 7,292 ஆக உயர்ந்துள்ளது. இதில் இஸ்ரேலில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 1,405 பேரும், காசா முனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5,791 பேரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில் பாலஸ்தீன மக்களின் விதி இஸ்ரேலின் கைகளில் இருக்க முடியாது என பாலஸ்தீனத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாத் அல் மலிக்கி தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாலஸ்தீனத்திற்கு எதிரான தாக்குதலை நிறுத்த ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் காசாவில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலானோர் பொதுமக்கள் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாத் அல் மலிக்கி குற்றம்சாட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...