images 16
உலகம்செய்திகள்

இஸ்ரேல் மீது போர் குற்றங்களுக்காக கண்டனம் வெளியிட்டுள்ள மலாலா யூசுப்சாய்

Share

இஸ்ரேல் மீது போர் குற்றங்களுக்காக கண்டனம் வெளியிட்டுள்ள மலாலா யூசுப்சாய்

காசா மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் போர் குற்றங்களுக்காக இஸ்ரேலை தொடர்ந்து கண்டிப்பதாகவும் பாகிஸ்தானிய சமூக ஆர்வலர் மலாலா யூசுப்சாய் (Malala Yousafzai) தெரிவித்துள்ளார்.

சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் மலாலா, பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, ”காசா மக்களுக்கான எனது ஆதரவில் எந்தவித குழப்பமும் இருக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன்.

போர் நிறுத்தம் அவசியம், அவசரம் என்று புரிந்துகொள்வதற்கு இன்னும் அதிகமான இறப்புகள், குண்டு வீசப்பட்ட பாடசாலைகள் மற்றும் பசியால் வாடும் குழந்தைகள் அவசியம் இல்லை. சர்வதேச சட்டங்களை மீறியதற்காகவும், போர் குற்றங்களுக்காகவும் இஸ்ரேலை நான் கண்டிக்கிறேன், தொடர்ந்து கண்டிப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.

2012ஆம் ஆண்டு பெண் கல்வியை ஆதரித்து பேசியதற்காக தாலிபான்களால் தலையில் சுடப்பட்ட மலாலா யூசுப்சாய் அதன் பின்னர் 2 ஆண்டுகள் கழித்து அவர் அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்று, இளம் வயதிலேயே இந்த விருதை பெற்றவர் என பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....