rtjy 195 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் பணயக்கைதிகள் ஒப்பந்தம் இறுதி கட்டத்தில்

Share

இஸ்ரேல் – ஹமாஸ் பணயக்கைதிகள் ஒப்பந்தம் இறுதி கட்டத்தில்

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஹமாஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேலுடன் ஹமாஸ் அதிகாரிகள் போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் நெருங்கியிருக்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.

போர்நிறுத்தத்திற்கான முதல் ஒப்பந்தம் மற்றும் இரு தரப்பிலும் பாரிய அளவில் கைதிகளை விடுவிப்பது என்பது இறுதி நிலையில் உள்ளது எனவும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதற்கான பதில் தாக்குதலையும் இஸ்ரேல் தரப்பு முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த போரில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 2,700 பேர் காணாமல் போயுள்ளனர்.

மேலும், இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய , ஹமாஸ் அமைப்பின் தளபதிகள் 3 பேர் ஒரே நாள் இரவில் சுட்டு கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் இராணுவம் அறிவித்திருந்தது.

இது தொடர்பில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில்,

“நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம். இந்த தருணத்தில், நிறைய கூறுவது சரியாக இருக்காது. விரைவில் நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என கூறியுள்ளார்.

பணய கைதிகளை விடுவிக்கும் விவகாரத்தில் முன்னேற்றத்திற்கான விடயங்கள் தொடர்பில் நெதன்யாகு, அந்நாட்டு அரசுடன் கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்வர் என அந்நாட்டு அரச தகவல் தொடர்பாடல் அமைச்ச்சு கருத்து வெளியிட்டுள்ளது.

போர்நிறுத்தத்திற்கான முதல் ஒப்பந்தம் மற்றும் இரு தரப்பிலும் பாரிய அளவில் கைதிகளை விடுவிப்பது என்பது இறுதி நிலையில் உள்ளது என்றும் அரசின் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
Canned Fish 1200px 22 11 06 1000x600 1
செய்திகள்இலங்கை

டின் மீன் வகைகளுக்கான புதிய அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை...

AA1QtdSx
செய்திகள்உலகம்

தென் கொரியா சியோனானில் பாரிய தீ விபத்து: இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு 129 தீயணைப்பு வீரர்கள் முயற்சி!

தென் கொரியாவின் தென் சங் சியோங் மாகாணம், சியோனான் நகரம், தொங்னாம்-கு, புசியோங்-ம்யோன் பகுதியில் அமைந்துள்ள...

Dr. Nalinda Jayathissa 2024.08.23 1 1
செய்திகள்இலங்கை

விலை மனுதாரர்களைத் தெரிவு செய்வதில் நடந்த மோசடிகள் குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி!

மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள மோசடிகள் குறித்து விரைவில் தகவல்கள் வெளியிடப்படும் என...

fc8354edbbb9260d3534c77dcb0e01de 1200
செய்திகள்உலகம்

வெளிநாட்டு மாணவர் கட்டணத்தில் 6% புதிய வரி:  பிரித்தானியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அதிருப்தி!

வெளிநாட்டு மாணவர்களின் கல்விக் கட்டணத்தின் மீது பிரித்தானிய அரசாங்கத்தால் விதிக்கப்படவுள்ள புதிய வரித் திட்டம் குறித்து,...