23 653c27ff4a198
உலகம்செய்திகள்

தீவிரமாகும் ஹமாஸின் ஏவுகணை தாக்குதல்

Share

தீவிரமாகும் ஹமாஸின் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேலிய நகரான டெல் அவிவ் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கி இருப்பதாக ஹமாஸ் படையினர் அறிவித்துள்ளனர்.

இஸ்ரேல் இராணுவ படைகளுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே 21 நாளாக கடுமையான மோதல் நீடித்து வருகிறது.

இந்த போர் நடவடிக்கையில் மொத்தமாக இதுவரை 8,540 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இரு தரப்புகளும் தாக்குதலை முன்னெடுத்து வருவதால் உயிரிழப்புகள் மேலும் பல மடங்கு அதிகரிக்க கூடும் என்ற அச்சம் பரவி வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேலிய நகரான டெல் அவிவ் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கி இருப்பதாக ஹமாஸின் இராணுவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான காணொளி இணையத்தில் தற்போது பரவி வருகிறது.

இதன்படி ஹமாஸ் படையினரின் இந்த ஏவுகணை தாக்குதலை அடுத்து, இஸ்ரேலிய ஊடகங்கள் 3 முக்கிய காணொளிகளை பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த காணொளியில் இஸ்ரேலின் “Iron Dome”(இஸ்ரேலின் சிறப்பு வான் பாதுகாப்பு அமைப்பு) ஹமாஸ் படைகளின் ஏவுகணைகளுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது என்பதை காட்டுவதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world
செய்திகள்இந்தியா

சீமான் பின்னடைவு: தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பிரபு முன்னிலை!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி...

Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...