23 653c27ff4a198
உலகம்செய்திகள்

தீவிரமாகும் ஹமாஸின் ஏவுகணை தாக்குதல்

Share

தீவிரமாகும் ஹமாஸின் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேலிய நகரான டெல் அவிவ் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கி இருப்பதாக ஹமாஸ் படையினர் அறிவித்துள்ளனர்.

இஸ்ரேல் இராணுவ படைகளுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே 21 நாளாக கடுமையான மோதல் நீடித்து வருகிறது.

இந்த போர் நடவடிக்கையில் மொத்தமாக இதுவரை 8,540 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இரு தரப்புகளும் தாக்குதலை முன்னெடுத்து வருவதால் உயிரிழப்புகள் மேலும் பல மடங்கு அதிகரிக்க கூடும் என்ற அச்சம் பரவி வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேலிய நகரான டெல் அவிவ் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கி இருப்பதாக ஹமாஸின் இராணுவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான காணொளி இணையத்தில் தற்போது பரவி வருகிறது.

இதன்படி ஹமாஸ் படையினரின் இந்த ஏவுகணை தாக்குதலை அடுத்து, இஸ்ரேலிய ஊடகங்கள் 3 முக்கிய காணொளிகளை பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த காணொளியில் இஸ்ரேலின் “Iron Dome”(இஸ்ரேலின் சிறப்பு வான் பாதுகாப்பு அமைப்பு) ஹமாஸ் படைகளின் ஏவுகணைகளுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது என்பதை காட்டுவதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....