tamilni 36 scaled
உலகம்செய்திகள்

காசா போரில் திருப்பம்: புது யுக்தியை கையாளும் இஸ்ரேல்

Share

காசா போரில் திருப்பம்: புது யுக்தியை கையாளும் இஸ்ரேல்

காசா போரில் இஸ்ரேலுக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ள ஹமாஸின் சுரங்கங்களை சமாளிக்க புதிய யுக்தி ஒன்றை கையாள இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.

அதன்படி ஸ்பாஞ்ச் குண்டுகளை பயன்படுத்த இஸ்ரேல் இராணுவம் முடிவு செய்துள்ளது.

ஸ்பாஞ்ச் குண்டுகள் என்பவை வெடிபொருட்கள் அல்ல. இவை இரு வகை இரசாயனங்கள் அடங்கிய சிறு பிளாஸ்டிக் கேன் வடிவில் இருக்கும்.

ஸ்பாஞ்ச் குண்டுகளை வீசியதும், அதில் இருந்து பொங்கி வரும் இரசாயன நுரை, சில விநாடிகளுக்குள் பெரியளவுக்கு பரவி, அந்த இடத்தையே கட்டி போன்ற தன்மையால் நிரப்பி விடும்.

இவற்றை சுரங்கத்தின் வாயில், அல்லது உள்ள பதுங்குக் குழிகளில் வீசினால், அதன் வழியாக ஹமாஸ் போராளிகள் வெளியே வந்து தாக்குதல் நடத்த முடியாது.

காசாவுக்குள் தற்போது வரை இஸ்ரேல் இராணுவம் முழுவதுமாக நுழையாததற்கான காரணங்களில் முக்கியமானது, ஹமாஸ் அமைத்துள்ள சுரங்கங்கள்.

காசாவில் சுமார் 20 ஆண்டுகள் கடுமையாக முயன்று பூமிக்குள் வலைப்பின்னல்களைப் போல ஹமாஸ் உருவாக்கி வைத்துள்ள சுரங்கங்களில் இருந்து போராளிகள் வெளியே வந்து எதிர்பாராத வகையில் திடீர் தாக்குதல் நடத்தினால் தங்கள் தரப்பில் பெரும் உயிர்ச் சேதம் ஏற்படும் என்பதே இஸ்ரேல் இராணுவனத்தின் தயக்கத்துக்குக் காரணம்.

2021-இல் 96 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஹமாஸின் சுரங்கங்களை அழித்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்திருந்தது. ஆனால், தங்கள் வசம் 483 கிலோ மீட்டர் அளவுக்கு சுரங்கங்கள் இருப்பதாகவும், இஸ்ரேல் அழித்தது 5 சதவீதம் கூட இல்லை எனவும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இதனால் ஹமாஸ் அமைப்பின் இந்த வியூகத்தை முறியடிக்க இஸ்ரேல் இராணுவம் அறிமுகப்படுத்தி இருக்கும் திட்டம் தான் ஸ்பாஞ்ச் குண்டுகள் எனப்படும் நவீன இரசாயன ஆயுதம்.

மிகவும் ஆபத்தான இரசாயனங்களைக் கொண்டு ஸ்பாஞ்ச் குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஸ்பாஞ்ச் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்தத் தொடங்கும் போது, காசா யுத்தம் புதிய பரிமாணத்துக்குச் செல்லக் கூடும் என இராணுவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 108
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு விசேட எரிபொருள் ஒதுக்கீடு: அரசாங்கத்தின் புதிய திட்டம் குறித்து அறிவிப்பு!

இலங்கையிலுள்ள பெரிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் செயல்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக...

world 107
செய்திகள்உலகம்

ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: கவலையின்றி UFC சண்டையைக் கண்டுகளித்த டொனால்ட் டிரம்ப்!

மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்காக ஈரானுடன் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட மிக முக்கியமான அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித...

world 106
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையிலிருந்து வெலிசராவுக்கு மாற்றப்பட்ட 7 முக்கிய பாதாள உலகக் கும்பல் தலைவர்கள்!

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைச் சேர்ந்த ஏழு முக்கிய தலைவர்கள், பூசா உயர் பாதுகாப்புச் சிறையிலிருந்து...

world 101
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: போர் நிறுத்தத்தைத் தொடர ஆஸ்திரேலியா வலியுறுத்தல்!

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி முடிவடைந்ததைத்...