tamilni 175 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் விடுத்த பகிரங்க அறிவிப்பு

Share

இஸ்ரேல் விடுத்த பகிரங்க அறிவிப்பு

பணயக் கைதிகளாக அழைத்து செல்லப்பட்டுள்ள தங்களது நாட்டு பிரஜைகள் விடுவிக்கப்படும் வரை காசா மீதான பதில் தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

காசாவுக்கான எரிபொருள், நீர் மற்றும் உணவு விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ள நிலையில் காசாவில் மின்சாரம் துண்டிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹமாஸ் தரப்பினர் நடத்திய தாக்குதல்களில் இஸ்ரேலில் இதுவரையில் 1,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசா பகுதியிலுள்ள ஹமாஸ் ஆயுததாரிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் இதுவரையில் 1,300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், ஹமாஸ் தரப்பினர் 150 இஸ்ரேலியர்களை பணயக் கைதிகளாக அழைத்துச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இஸ்ரேலில் உள்ள சுமார் 25 அமெரிக்க பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் என்டணி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இஸ்ரேலுக்கு சென்றுள்ள அவர், அங்கு ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அமெரிக்கா தொடர்ந்தும் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் எனவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் என்டணி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
20 14
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை...

17 13
இலங்கைசெய்திகள்

நான்கு தமிழ் இளைஞர்கள் பரிதாப மரணம்

புத்தளம் (Puttalam) மாவட்டம், வென்னப்புவ கடலில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மேற்படி நால்வரும் குளித்துக்...

19 13
இலங்கைசெய்திகள்

இறம்பொட கோர விபத்து : 23ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

கொத்மலை, ரம்பொட கரண்டியெல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து விபத்தில் படுகாயமடைந்து...

18 13
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்

கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்று...