1 scaled
உலகம்செய்திகள்

யேமனிலிருந்து இஸ்ரேலை நோக்கிய ஏவுகணைகள்: இலக்குவைக்கப்பட்ட அமெரிக்கா

Share

யேமனிலிருந்து இஸ்ரேலை நோக்கிய ஏவுகணைகள்: இலக்குவைக்கப்பட்ட அமெரிக்கா

ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவதளங்களை இலக்குவைத்து ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.

“அய்ன் அல்அசா விமானப்படை தளத்திற்குள் பாரியவெடிப்பு சத்தங்கள் கேட்டன. ஈராக்கிய படையினர் அந்த விமானதளத்தை மூடி சோதனைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த விபரங்களும் வெளியாகவில்லை” என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஈரானிற்கு நெருக்கமான ஈராக்கிய குழுக்கள் ஹமாஸ் விவகாரத்தில் அமெரிக்கா – இஸ்ரேலிற்கு ஆதரவளிப்பதற்காக அமெரிக்காவின் நிலைகளை தாக்கப்போவதாக எச்சரித்திருந்தன.

இந்நிலையில், ஈராக், சிரியாவில் உள்ள அமெரிக்க படையினர் அதிகளவு ஆளில்லா விமானதாக்குதலிற்கு உள்ளாகின்றனர் என தெரிவித்துள்ள பென்டகன் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஈரான் ஆதரவு ஆயுதக்குழுக்கள் இந்த தாக்குதல்களை மேற்கொள்கின்றன என பென்டகன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இஸ்ரேலை நோக்கி யேமனில் உள்ள ஹெளத்திபோராளிகள் ஏவிய குரூஸ் ஏவுகணையை அமெரிக்க யுத்தகப்பல் சுட்டுவீழ்த்தியுள்ளது என பெனடகன் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
12 12
இலங்கைசெய்திகள்

தமிழ்க் கட்சிகளிடம் சுமந்திரன் முன்வைத்துள்ள கோரிக்கை

ஒரு சபையில் குறித்த ஒரு கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் இருந்தால் அந்தக்கட்சிக்கு நிர்வாகத்தை அமைக்க கூடிய...

11 11
இலங்கைசெய்திகள்

சர்வதேச உளவுத்துறையின் உதவியுடன் பாதாள உலகம் தொடர்பில் முக்கிய நடவடிக்கை

நாட்டை விட்டு தப்பிச் சென்ற 10 பிரபல பாதாள உலகத் தலைவர்களை விரைவாகக் கைது செய்வதற்காக...

10 14
இலங்கைசெய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

திறைசேரி உண்டியல்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) முக்கிய...

9 14
இலங்கைசெய்திகள்

கொழும்பில் முக்கிய வெசாக் வலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

கங்காராம விகாரை உள்ளிட்ட கொழும்பின் முக்கிய வெசாக் வலயங்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார்...