rtjy 163 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸிடமிருந்து நூற்றுக்கணக்கான பிணைக்கைதிகள் மீட்பு

Share

ஹமாஸிடமிருந்து நூற்றுக்கணக்கான பிணைக்கைதிகள் மீட்பு

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் எலைட் பிரிவு வீரர்கள் அதிரடியாக 60 ஹமாஸ் அமைப்பினரை கொன்று, 250 பிணைக்கைதிகளை மீட்ட காணொளி வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பாக, இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தொடர்ச்சியான பதிவுகளும், காணொளியும் பகிரப்பட்டுள்ளது.

அதில், 60 ஹமாஸ் அமைப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும், ஹமாஸ் அமைப்பின் தெற்கு மண்டல தளபதி முகம்மது அபு உள்பட 26 பேரை கைது செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிணைக்கைதிகளை கடத்தி வைத்திருக்கும் பகுதிக்குள் பாதுகாப்புப் படை வீரர்கள் ஒவ்வொரு அடியாக அடுத்தடுத்து நுழைந்து, ஹமாஸ் அமைப்பினரை எதிர்த்து சண்டையிடும் காட்சிகளும் அந்த காணொளியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் ஹமாஸ் அமைப்பினரை கொன்று, பிணைக்கைதிகளை மீட்பதற்காக இந்தச் சண்டை நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஹமாஸ் ஆயுதக் குழுவினரை அழிக்கும் வகையில் காஸா மீது தரைவழித் தாக்குதலுக்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் இந்த காணொளி வெளியாகியிருக்கிறது.

இதேவேளை காஸாவின் ஒரே மின் நிலையமும் எரிபொருள் பற்றாக்குறையினால் மூடப்பட்டிருப்பதால் காஸா பகுதி இருளில் மூழ்கியுள்ளது.

இருப்பினும் தனியாா் ஜெனரேட்டா்கள் மூலம் சில இடங்களில் மட்டுமே மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சா்வதேச செஞ்சிலுவை சங்கத்தைச் சோ்ந்த மூத்த அதிகாரி ஒருவர், காஸாவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், புதிதாகப் பிறந்த குழந்தைகளை இன்குபேட்டரில் வைப்பதிலும், வயது முதிா்ந்த நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் செலுத்துவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்வதும், எக்ஸ்ரே எடுப்பதும் நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...