tamilni 147 scaled
உலகம்செய்திகள்

காசாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்

Share

காசாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்

காசாவில் நிலவும் போர் சூழல் காரணமாக அங்கு இருக்கும் வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறையினால் மக்கள் அவதியுறும் நிலை காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மயக்க மருந்து கொடுக்கப்படாமலேயே செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை காசா நகரில் உள்ள அல் ஷிஃபா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வருவோருக்கு, மயக்க மருந்து கொடுக்கப்படாமல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால் அவர்கள் வலியால் அவதியுறும் நிலை காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் வைத்தியசாலையில் மயக்க மருந்து மற்றும் வலி நிவாரண மருந்துகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் காயமடைந்து வருவோரின் உயிரை காப்பாற்ற, வேறு வழியின்றி மயக்க மருந்து கொடுக்கப்படாமலேயே அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உள்ளதாக வைத்தியசாலை செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோமின் கருத்தின்படி, காசா பகுதியில் சராசரியாக ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை கொல்லப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் காசாவில் உள்ள 36 வைத்தியசாலைகளில் பாதிக்கும் மேற்பட்டவை தற்போது செயல்பட முடியாத நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...