202238 Freedman Ukraine
உலகம்செய்திகள்

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொல்லப்பட்ட 241 மக்கள்: இஸ்ரேல் வெளியிட்ட முக்கிய தகவல்

Share

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 241 மக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக காசாவின் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 241 பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக காசாவில் உள்ள ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 382 பொதுமக்கள் இஸ்ரேலிய படையின் தாக்குதலில் காயமடைந்து இருப்பதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், இஸ்ரேலிய படைகளின் தாக்குதலை தனது மக்களுக்கு எதிரான “கடுமையான குற்றம்” என கண்டித்துள்ளார்.

அமைச்சகத்தின் தகவல்படி, 11 வார மோதலில் இதுவரை பாலஸ்தீனத்தில் 20,915 பேர் கொல்லப்பட்டுள்ளனர், அதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இஸ்ரேல் ராணுவ தலைவர் ஹெர்ஸி ஹலேவி, ஹமாஸ் படைகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை பல மாதங்கள் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய் கிழமை மட்டும் 100 இடங்களில் தாக்குதல் நடத்தி இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...