2 9 scaled
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதம்: பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்குமா?

Share

போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதம்: பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்குமா?

ஹமாஸ் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை 100 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது, இந்நிலையில் ஹமாஸ் படையினரிடம் மீதமுள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான கட்டமைப்பிற்கு இஸ்ரேல், அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகளை சேர்ந்த பேச்சுவார்தையாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர் என நம்பத்தகுந்த அதிகாரிகள் NBC செய்தி நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தம் தொடர்பான வரை இன்று ஹமாஸ் படையினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்திற்கான சம்மதம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதில் கத்தார் பிரதமர் மற்றும் பிற நாடுகளை சேர்ந்த உளவு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். சண்டை நிறுத்தம் மற்றும் அத்தியாவசிய உதவிகள் ஆகியவற்றை உறுதிப்படுத்துதலுக்கு மாற்றாக ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகள் விடுவிப்பை முன்னெடுப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இஸ்ரேலிய படைகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்படுவர் என தெரிகிறது.

இதற்கு முன் பேச்சுவார்த்தைகளின் மூலம் கடந்த ஆண்டு நவம்பரில் முன்னெடுக்கப்பட்ட போர் நடவடிக்கையில் 100 இஸ்ரேலிய பிணைக் கைதிகளும், 240 பாலஸ்தின பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால் இந்த போர் நிறுத்தம் ஒரு வாரத்திற்கு பிறகு சீர்குலைந்தது. ஹமாஸ் படையினரிடம் தற்போது காசாவில் 100 பிணைக் கைதிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 11 1
உலகம்செய்திகள்

ஆயிரக்கணக்கானோருக்குக் கனேடியக் குடியுரிமை: பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த மற்றும் தத்தெடுத்த குழந்தைகளுக்குப் புதிய சட்டம்!

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்குவதற்காக ஒரு புதிய சட்டத்தை கனடா தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்...

25 6916c692d4a63
உலகம்செய்திகள்

விண்வெளி திட்டத்தில் ஈரான் முன்னேற்றம்: ஒரே ராக்கெட் மூலம் 3 உள்நாட்டுச் செயற்கைக்கோள்கள் அடுத்த 3 நாட்களில் விண்ணில் ஏவத் திட்டம்!

ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான்...