R 3
உலகம்செய்திகள்

நாம் தமிழர் கட்சி பொதுச்செயலாளராகிறாரா கயல்விழி சீமான்? தள்ளிப்போகும் பொதுக்குழு கூட்டம்

Share

நடைபெற இருந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் தள்ளிப்போனதால் அக்கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் உள்ளார். அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளானர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த தடா சந்திரசேகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனையடுத்து அந்த பதவிக்கு யாரையும் நியமனம் செய்யப்படவில்லை.

இதனிடையே, தடா சந்திரசேகரன் நினைவேந்தல் நிகழ்விலும், வழக்கறிஞர்கள் அணி சார்பில் நடைபெற்ற போராட்டத்திலும் சீமானின் மனைவி கயல்விழி கலந்து கொண்டார். இதனால், அக்கட்சியின் அடுத்த பொதுச்செயலாளராக கயல்விழி தான் என்று தகவல்கள் வெளியாகின. இவர் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் ஆவார்.

கட்சியில் இருந்து வெளிவந்த இந்த தகவலுக்கு நாம் தமிழர் கட்சியினர் யாரும் ஆதரிக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை.

இந்நிலையில், இன்று நடைபெற இருந்த நாம் தமிழர் கட்சி பொதுக்குழு கூட்டம் மழை வெள்ளம் காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதில், கயல்விழியை பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட உள்ளதற்கு மூத்த நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுக்குழு கூட்டம் தள்ளிப்போனது என்றும் கூறுகின்றனர்.

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...