3 26
உலகம்செய்திகள்

டெர்மினேட்டர் குறித்து வெளியான இலங்கை பொலிஸின் பதில்

Share

டெர்மினேட்டர் குறித்து வெளியான இலங்கை பொலிஸின் பதில்

கொழும்பில் (Colombo) இஸ்ரேலிய சிப்பாயான கால் ஃபெரன்புக் (Gal Ferenbook) தங்கியிருப்பதாகக் கூறப்படுவது தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று இலங்கையின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

‘டெர்மினேட்டர்’ என்று அழைக்கப்படும் ஃபெரன்புக், ஒரு பாலஸ்தீனிய குடிமகனின் மரணத்திற்கும், அவரின் உடலை இழிவுபடுத்தியதற்கும் பொறுப்பானவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட அமைப்பான ஹிந்த் ரஜாப் அறக்கட்டளை, கடந்த வாரம், ஃபெரன்புக்கின் புகைப்படத்தை வெளியிட்டு, அவர் இலங்கைக்கு சென்றிருப்பதாக தெரிவித்திருந்தது.

காசாவில் ஒரு பாலஸ்தீனிய குடிமகனை கொலை செய்தமைக்காக, அவரைக் கைது செய்ய இலங்கை அதிகாரிகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் இன்டர்போலிடம் முறையிட்டதாக அது தெரிவித்திருந்தது.

இதற்கிடையில், இலங்கையில் தங்கியிருப்பதாக கூறப்படும் ஃபெரன்புக்கைக் கைது செய்ய வலியுறுத்தி, கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே சுதந்திர பாலஸ்தீன இயக்கம் மற்றும் ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கூட்டுப் போராட்டமும் நடைபெற்றது.

எனினும் ஹிந்த் ரஜப் அறக்கட்டளையின் அறிக்கைகளைத் தவிர, இந்தக் கூற்றை உறுதிப்படுத்தும் அதிகார பூர்வ ஆதாரம் கிடைக்கவில்லை என்று இலங்கையின் பொலிஸ் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...