tamilni 231 scaled
உலகம்செய்திகள்

சுவிஸ் பயணத்தை ரத்து செய்த ஈரான் ஜனாதிபதி

Share

சுவிஸ் பயணத்தை ரத்து செய்த ஈரான் ஜனாதிபதி

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், உலகளாவிய அகதிகள் மன்றம் என்னும் உலகத் தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த ஈரான் ஜனாதிபதி, திடீரென தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், நேற்று(13) முதல், எதிர்வரும் 15ஆம் திகதி வரை, உலகளாவிய அகதிகள் மன்றம் என்னும் நிகழ்வு நடைபெற உள்ளது.

உலகத் தலைவர்கள் பலர் பங்கேற்கும் அந்த நிகழ்ச்சியில், ஈரான் சார்பில் கலந்து கொள்ளும் குழுவின் தலைவராக, ஈரான் ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசி ஜெனீவா செல்ல திட்டமிட்டிருந்தார்.

எனினும் அவர் திடீரென தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார். அதற்குக் காரணம், ஈரான் ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசியைக் கைது செய்ய அவரது எதிரணியைச் சேர்ந்த மூன்று பேர் சுவிஸ் அட்டர்னி ஜெனரலிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

ஆகவே, இப்ராஹிம் ரைசி ஜெனீவா செல்லும் நிலையில் கைது செய்யப்படலாம் என்பதாலேயே, அவர் திடீரென தனது பயணத்தை ரத்துசெய்துவிட்டதாக கருதப்படுகிறது.

இப்ராஹிம் ரைசி ஈரானின் டெஹ்ரான் மாகாண அரசின் துணைத்தலைவராக இருந்தபோது, இனப்படுகொலை மற்றும் மனித இனத்துக்கெதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...