24 661be3175feac
உலகம்செய்திகள்

போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை

Share

போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாரிய போர் ஏற்படும் என்ற அச்சம் சர்வதேச ரீதியாக எழுந்துள்ள நிலையில், அந்த அலை தற்போது குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேன் மீது பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள் இன்று காலையுடன் நிறைவடைந்துள்ளதாக ஐ.நா சபைக்கான ஈரானின் விசேட வதிவிட பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமது பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவோ இஸ்ரேல் எதிர்வினையாற்ற முயற்சித்தால் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என ஈரான் எச்சரித்துள்ளது.

எம் மீது தாக்குதல் நடத்தினால் பல மடங்காக திருப்பியடிப்போம் என ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் முகமது பாகேரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் எங்கள் பதில் இன்றிரவு இராணுவ நடவடிக்கையை விட பெரியதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அரச தொலைக்காட்சிக்கு கருத்து வெளியிட்டவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா ஆதரவு வழங்கினால், அமெரிக்காவின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஈரான் மீது வலிந்த தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டால் அதற்கு ஆதரவு வழங்க மாட்டோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதேவேளை, இஸ்ரேல் மீதான பதிலடித் தாக்குதல்களை நடத்துவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக ஈரான் தனது அண்டை நாடுகளுக்கு அறிவித்ததாக வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
24 669df6417f6df
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர சுமார்...

images 3 3
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: மூளையாகச் செயல்பட்ட இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக பெண் சட்டத்தரணி கைது

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலைக்கு மூளையாகச் செயற்பட்டதாகக் கருதப்படும் இஷாரா...

images 1 9
செய்திகள்இலங்கை

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து: 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

கென்யாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

images 3 2
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்: 2026 வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் என எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை...