24 661be3175feac
உலகம்செய்திகள்

போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை

Share

போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாரிய போர் ஏற்படும் என்ற அச்சம் சர்வதேச ரீதியாக எழுந்துள்ள நிலையில், அந்த அலை தற்போது குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேன் மீது பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள் இன்று காலையுடன் நிறைவடைந்துள்ளதாக ஐ.நா சபைக்கான ஈரானின் விசேட வதிவிட பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமது பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவோ இஸ்ரேல் எதிர்வினையாற்ற முயற்சித்தால் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என ஈரான் எச்சரித்துள்ளது.

எம் மீது தாக்குதல் நடத்தினால் பல மடங்காக திருப்பியடிப்போம் என ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் முகமது பாகேரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் எங்கள் பதில் இன்றிரவு இராணுவ நடவடிக்கையை விட பெரியதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அரச தொலைக்காட்சிக்கு கருத்து வெளியிட்டவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா ஆதரவு வழங்கினால், அமெரிக்காவின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஈரான் மீது வலிந்த தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டால் அதற்கு ஆதரவு வழங்க மாட்டோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதேவேளை, இஸ்ரேல் மீதான பதிலடித் தாக்குதல்களை நடத்துவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக ஈரான் தனது அண்டை நாடுகளுக்கு அறிவித்ததாக வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...