17 1
உலகம்செய்திகள்

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை விடுக்கும் ஈரான்

Share

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை விடுக்கும் ஈரான்

தெஹ்ரான் மற்றும் பிராந்தியத்தில், தெஹ்ரானை ஆதரிக்கும் குழுக்களை குறிவைத்து இஸ்ரேலும் அதன் நட்பு நாடான அமெரிக்காவும் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei ) எச்சரித்துள்ளார்.

ஈரானிய (Iran) தேசத்துக்கு எதிராக அவர்கள் மேற்கொள்கின்ற செயற்பாடுகளுக்கு நிச்சயமாக பல்லை உடைக்கும் பதிலைப் பெறுவார்கள் என்று அவர் குறிப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் காசாவில் இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஆரம்பித்ததில் இருந்து பிராந்தியத்தில் பதற்றங்கள் அதிகரித்துள்ளன.

இந்தநிலையில் 2024 அக்டோபர் 26 அன்று, இஸ்ரேல் தெஹ்ரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்தது.

முன்னதாக, ஈரான் ஆதரவு போராளி தலைவர்கள் மற்றும் ஒரு புரட்சிகர தளபதி ஆகியோர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக அக்டோபர் 1ஆம் திகதியன்று ஈரான் நடத்திய தாக்குதலுக்கு எதிர் தாக்குதலாகவே இஸ்ரேல் இந்த தாக்குதல்களை நடத்தியது.

இதன்போது ஈரானில் உள்ள இராணுவ தளங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதல்களால், சில ரேடார் அமைப்புகளுக்கு வரையறுக்கப்பட்ட சேதம் ஏற்பட்டதாக கூறிய ஈரானிய ஊடகங்கள், குறைந்தது நான்கு படையினரும், ஒரு பொதுமகனும் கொல்லப்பட்டதாக தெரிவித்திருந்தன.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

25 6906ded777bf4
செய்திகள்இலங்கை

நான்கு முன்னணி ஒப்பந்ததாரர்களுக்கு அரச ஒப்பந்தங்களில் பங்கேற்கத் தடை: மத்திய அதிவேக வீதி ஒப்பந்தத்தில் தவறான தகவல் அளித்ததே காரணம்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் (Ministry of Transport, Highways and Urban...

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...