17 1
உலகம்செய்திகள்

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை விடுக்கும் ஈரான்

Share

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை விடுக்கும் ஈரான்

தெஹ்ரான் மற்றும் பிராந்தியத்தில், தெஹ்ரானை ஆதரிக்கும் குழுக்களை குறிவைத்து இஸ்ரேலும் அதன் நட்பு நாடான அமெரிக்காவும் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei ) எச்சரித்துள்ளார்.

ஈரானிய (Iran) தேசத்துக்கு எதிராக அவர்கள் மேற்கொள்கின்ற செயற்பாடுகளுக்கு நிச்சயமாக பல்லை உடைக்கும் பதிலைப் பெறுவார்கள் என்று அவர் குறிப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் காசாவில் இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஆரம்பித்ததில் இருந்து பிராந்தியத்தில் பதற்றங்கள் அதிகரித்துள்ளன.

இந்தநிலையில் 2024 அக்டோபர் 26 அன்று, இஸ்ரேல் தெஹ்ரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்தது.

முன்னதாக, ஈரான் ஆதரவு போராளி தலைவர்கள் மற்றும் ஒரு புரட்சிகர தளபதி ஆகியோர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக அக்டோபர் 1ஆம் திகதியன்று ஈரான் நடத்திய தாக்குதலுக்கு எதிர் தாக்குதலாகவே இஸ்ரேல் இந்த தாக்குதல்களை நடத்தியது.

இதன்போது ஈரானில் உள்ள இராணுவ தளங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதல்களால், சில ரேடார் அமைப்புகளுக்கு வரையறுக்கப்பட்ட சேதம் ஏற்பட்டதாக கூறிய ஈரானிய ஊடகங்கள், குறைந்தது நான்கு படையினரும், ஒரு பொதுமகனும் கொல்லப்பட்டதாக தெரிவித்திருந்தன.

Share
தொடர்புடையது
27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...

24 2
செய்திகள்அரசியல்இலங்கை

மத்திய கிழக்கு மோதலில் நடுநிலைமை அவசியம்: துறைமுகங்களை அனுமதிப்பது ஆபத்தானது – மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் தற்போது தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி...