3 2
உலகம்செய்திகள்

மத்திய கிழக்கில் பெரும் சக்தியாக உருவெடுக்கும் ஈரான்: யுத்தமின்றி ரத்தமின்றி நகர்த்தப்படும் காய்கள்

Share

ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) தெற்கு கடற்கரையில் மின்னணு போர் வசதிகளுடன் கூடிய புதிய நிலத்தடி ஏவுகணை நகரத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரங்களில், ஈரான் தனது அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் நோக்கில் ஏராளமான இராஜதந்திர நடவடிக்கைகளுடன் இணைந்து, “நிலத்தடி ஏவுகணை நகரங்கள்” தொடர்பான தொடர்ந்து வெளியிட்டு வந்தது.

இந்த நிலையில், IRGC இன் கடற்படைப் பிரிவு ஈரானின் தெற்கு கடற்கரையில் ஒரு புதிய நிலத்தடி தளத்தில் வைத்திருக்கும் மின்னணு போர் வசதிகளுடன் கூடிய கப்பல் ஏவுகணைகளை காட்சிப்படுத்தியுள்ளது.

இதன்படி, குறித்த புதிய தளமானது, ஈரானின் IRGC கடற்படை மூலோபாய தெற்கு நீரில் உள்ள அழிப்பாளர்களை குறிவைக்க வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நிலத்தடி தளத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட ஏவுகணைகள், மின்னணு போரை எதிர்கொள்ளும் வகையில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் குறுகிய நேரத்தில் செயல்படுத்த கூடியவை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஏவுகணைகள் பொருத்தப்பட்ட டஜன் கணக்கான தாக்குதல் படகுகள் இந்த தளத்தில் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், ஈரான் தனது நிலத்தடி மற்றும் கள ஏவுகணை நகரங்களின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே வெளியிட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறனதொரு பின்னணியில், ஈரானிய இராணுவத்தின் தலைமைத் தளபதியும் துணை ஒருங்கிணைப்பாளருமான அட்மிரல் ஹபிபுல்லா சயாரி, தனது நாடு “எந்தவொரு அச்சுறுத்தலையும், அவை எங்கிருந்து தோன்றினாலும், எதிர்கொள்ள முழுமையாகத் தயாராக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...