மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் ‘Operation Epic Fury’ ராணுவ நடவடிக்கையில் மிகப்பெரிய திருப்பமாக, ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி காமேனி (Ayatollah Ali Khamenei) கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் முக்கிய ராணுவ நிலைகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துல்லியமான ஏவுகணைத் தாக்குதல்களில் அவர் உயிரிழந்ததாக முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ஈரான் ராணுவம் கடும் கொதிப்படைந்துள்ளது. “எங்களுக்கு இனி எல்லைக்கோடுகள் இல்லை” என அறிவித்துள்ள ஈரான், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ஐந்தாவது கடற்படை தலைமையகத்திற்கு அருகிலுள்ள 20 மாடி குடியிருப்பு கட்டிடம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தி தனது பதிலடியைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்த ராணுவ நடவடிக்கை ஈரானின் ஏவுகணை மற்றும் அணுசக்தி திறனை முற்றிலுமாக அழிப்பதற்கான ஒரு ‘மாபெரும் போர்’ (Massive Campaign) என்று குறிப்பிட்டுள்ளார்.
காமேனியின் மறைவு குறித்த தகவல் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், இது மத்திய கிழக்கில் ஈடுசெய்ய முடியாத அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர். தற்போது ஜோர்தான், ஈரான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தமது வான்பரப்புகளை மூடியுள்ளதால் சர்வதேச விமானப் போக்குவரத்து முடங்கியுள்ளது. உலக நாடுகள் அமைதிக்கு அழைப்பு விடுத்து வரும் போதிலும், இரு தரப்பும் பின்வாங்கத் தயாராக இல்லாததால் ஒரு முழு அளவிலான உலகப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

