இஸ்ரேல் நகரங்களில் குவியும் ஈரானின் ட்ரோன்களால் பதறியோடும் மக்கள்

24 661b2b4e8fb1b

இஸ்ரேல் நகரங்களில் குவியும் ஈரானின் ட்ரோன்களால் பதறியோடும் மக்கள்

இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் வீதியெங்கும் அபாய ஒலி எழுப்பப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது 50 ட்ரோன்களை ஈரான் ஏவியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், 50 ட்ரோன்கள் என கணக்கிடபப்ட்டுள்ள நிலையில், ஒவ்வொரு ட்ரோனும் சுமார் 20 கிலோ அளவுக்கு குண்டுகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்றும் கசிந்துள்ளது.

இஸ்ரேல் எல்லையில் அத்துமீறும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக இஸ்ரேல் நகரங்களில் உள்ள மக்கள் பல பகுதிகளுக்கு பதறியோடும் நிலையில் வீதியெங்கும் இஸ்ரேல் அபாய ஒலியை எழுப்பி வருகின்றது.

Exit mobile version