2 scaled
உலகம்செய்திகள்

இந்தியாவின் அண்டை நாட்டின்மீது திடீர்த்தாக்குதல் நடத்திய ஈரான்: இரண்டு குழந்தைகள் பலி

Share

ஈரான், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் திடீர்த்தாக்குதல் நிகழ்த்தியுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை, பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் திடீர்த்தாக்குதல் நிகழ்த்தியுள்ளது.

இந்த தாக்குதலில் இரண்டு குழந்தைகள் பலியானதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான், ஈரான் தங்கள் வான் எல்லைக்குள் அத்துமீறி தாக்கியுள்ளதாகவும், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

ஈரான் தரப்போ, பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் போராளிக்குழுவான Jaish al-Dhulm என்னும் அமைப்பின் தளங்களை அழிப்பதற்காகவே தாங்கள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக விளக்கமளித்துள்ளது.

இந்த தாக்குதலில் அப்பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றும் சேதமடைந்துள்ளதாக, பெயர் வெளியிட விரும்பாத பாகிஸ்தான் பாதுகாப்பு அலுவலர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

ஈரான் அவ்வப்போது தனது எல்லையோரமாக இருக்கும் போராளிகளுடன் சண்டையில் ஈடுபடுவது உண்டு என்றாலும், அது பாகிஸ்தான் மீது ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தும் என யாரும் எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...