2 scaled
உலகம்செய்திகள்

இந்தியாவின் அண்டை நாட்டின்மீது திடீர்த்தாக்குதல் நடத்திய ஈரான்: இரண்டு குழந்தைகள் பலி

Share

ஈரான், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் திடீர்த்தாக்குதல் நிகழ்த்தியுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை, பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் திடீர்த்தாக்குதல் நிகழ்த்தியுள்ளது.

இந்த தாக்குதலில் இரண்டு குழந்தைகள் பலியானதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான், ஈரான் தங்கள் வான் எல்லைக்குள் அத்துமீறி தாக்கியுள்ளதாகவும், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

ஈரான் தரப்போ, பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் போராளிக்குழுவான Jaish al-Dhulm என்னும் அமைப்பின் தளங்களை அழிப்பதற்காகவே தாங்கள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக விளக்கமளித்துள்ளது.

இந்த தாக்குதலில் அப்பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றும் சேதமடைந்துள்ளதாக, பெயர் வெளியிட விரும்பாத பாகிஸ்தான் பாதுகாப்பு அலுவலர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

ஈரான் அவ்வப்போது தனது எல்லையோரமாக இருக்கும் போராளிகளுடன் சண்டையில் ஈடுபடுவது உண்டு என்றாலும், அது பாகிஸ்தான் மீது ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தும் என யாரும் எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 10
செய்திகள்இந்தியா

டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு: பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் – உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நிலைமை குறித்து ஆலோசனை!

புதுடெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து 8 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி...

1762783393 Namal Rajapaksa SLFP Sri Lanka Ada Derana 6
செய்திகள்அரசியல்இலங்கை

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நாமல் ராஜபக்ஷ: 10 ஆண்டுகளுக்குப் பிறகு வருகை – அரசியல் கூட்டம் குறித்துப் பேச்சுவார்த்தை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான கட்சியின்...

image 3268f37140
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

மன்னார் காற்றாலைத் திட்ட எதிர்ப்புப் போராட்டம் 100ஆவது நாளை எட்டியது: வாழ்வுரிமைச் சாத்வீகப் போராட்டம் தீப்பந்த எழுச்சிப் போராட்டமாக மாற்றம்!

மன்னார் தீவில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்களின் வாழ்வுரிமைச் சாத்வீகப்...