உலகம்செய்திகள்

இந்தியாவின் அண்டை நாட்டின்மீது திடீர்த்தாக்குதல் நடத்திய ஈரான்: இரண்டு குழந்தைகள் பலி

Share
2 scaled
Share

ஈரான், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் திடீர்த்தாக்குதல் நிகழ்த்தியுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை, பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் திடீர்த்தாக்குதல் நிகழ்த்தியுள்ளது.

இந்த தாக்குதலில் இரண்டு குழந்தைகள் பலியானதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான், ஈரான் தங்கள் வான் எல்லைக்குள் அத்துமீறி தாக்கியுள்ளதாகவும், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

ஈரான் தரப்போ, பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் போராளிக்குழுவான Jaish al-Dhulm என்னும் அமைப்பின் தளங்களை அழிப்பதற்காகவே தாங்கள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக விளக்கமளித்துள்ளது.

இந்த தாக்குதலில் அப்பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றும் சேதமடைந்துள்ளதாக, பெயர் வெளியிட விரும்பாத பாகிஸ்தான் பாதுகாப்பு அலுவலர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

ஈரான் அவ்வப்போது தனது எல்லையோரமாக இருக்கும் போராளிகளுடன் சண்டையில் ஈடுபடுவது உண்டு என்றாலும், அது பாகிஸ்தான் மீது ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தும் என யாரும் எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...