3 1 1 scaled
உலகம்செய்திகள்

போருக்கு தயாராகிறதா ஈரான்… 200 ஹெலிகொப்டர்களுடன் தீவிரப்பயிற்சியில் தரைப்படை

Share

போருக்கு தயாராகிறதா ஈரான்… 200 ஹெலிகொப்டர்களுடன் தீவிரப்பயிற்சியில் தரைப்படை

இஸ்ரேல் – ஹமாஸ் போர் இறுகி வரும் நிலையில், தற்போது ஈரானின் தரைப்படை இரண்டு நாட்கள் தீவிரப் பயிற்சிக்கு களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஸா மீதான இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதலில் இதுவரை பலியான அப்பாவி மக்களின் எண்ணிக்கை 7,000 கடந்துள்ளது.

இந்த நிலையில், காஸா மீதான போர் தடுத்து நிறுத்தப்படவில்லை என்றால், அதை மூன்னெடுத்து நடத்தும் அமெரிக்கா அந்த தீயில் இருந்து தப்ப முடியாது என ஈரான் மிரட்டல் விடுத்திருந்தது.

தற்போது தரைப்படையை தயார் படுத்தும் நோக்கில், இரண்டு நாட்கள் தீவிரப் பயிற்சிக்கு களமிறக்கப்பட்டுள்ளது. தரைப்படையுடன் 200 ஹெலிகொப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் காஸா மீது தரைவழித் தாக்குதலை முன்னெடுத்தால், லெபனான் மற்றும் ஈரான் போரில் களமிறங்கும் வாய்ப்புகள் அதிகரித்தே காணப்படுகிறது.

மேலும், ஈரான் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக குறிப்பிட்டே, தரைப்படையின் பயிற்சியை முன்னெடுத்துள்ளது. ஈரானின் 7 மாகாணங்களில் இருந்தும் துருப்புகளும் தளவாடங்களும் பயிற்சிக்கு என திரட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேலின் தற்போதைய போக்கு கண்மூடித்தனமானது என உணர்ந்து கொண்ட ஜோ பைடன், தற்போது பாலஸ்தீன மக்களின் உயிர் முக்கியம் என்ற வகையில் கருத்து தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...