24 664c640af3182
உலகம்செய்திகள்

ஈரானிய ஜனாதிபதியின் இறுதி ஊர்வலம் ஆரம்பம்

Share

ஈரானின் ஜனாதிபதி மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருக்கான இறுதி ஊர்வலம் வடமேற்கு ஈரானில் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின் ஜோல்பா நகருக்கு அருகில் உள்ள மலைப் பகுதியில் உலங்கு வானூர்தி விழுந்ததில், இப்ராஹிம் ரைசி(Ebrahim Raisi), மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன்(Hossain Ameer Abdullah) ஆகியோர் நேற்று உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில், ஈரானில் 5 நாட்களுக்கு துக்க தினம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இலங்கை உள்ளிட்ட பல்வேறுநாடுகளில் துக்க தினமாகவும், தேசிய கொடி அரைக்கம்பத்திலும் பறக்கவிடப்பட்டுள்ளது.

குறித்த விபத்து தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும் தற்போது விபத்து தொடர்பில் விசாரணையை ஈரான் புலனாய்வுத்துறை ஆரம்பித்துள்ளதாகவும், அந்த இடத்திற்கு ஒரு குழுவை அனுப்பியுள்ளதாகவும் ஈரானின் ஆயுதப்படை தெரிவித்துள்ளது.

விபத்து நடந்த இடத்திற்கு மிக அருகில் உள்ள பெரிய நகரமான Tabriz இல் நடந்த இறுதி ஊர்வலம், நாட்டின் இஸ்லாமியப் புரட்சியின் போது திரண்ட மக்களிலும் பார்க்க அதிகம் என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
11 2
செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபையில் அதிரடி வேலைநிறுத்தம்: 6 மணிநேர போராட்டத்தால் மின் விநியோகத்தில் பதற்றம்!

இலங்கை மின்சார சபையை (CEB) கலைத்து, அதனைச் சட்டவிரோதமான முறையில் மறுசீரமைக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும்...

10 2
செய்திகள்அரசியல்இலங்கை

புலனாய்வு அதிகாரிகளை வேட்டையாடுவது ஆபத்தானது: சுரேஷ் சலே கைது குறித்து அலி சப்ரி கடும் எச்சரிக்கை!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது...

09 2
செய்திகள்அரசியல்இலங்கை

சுரேஷ் சலே கைது: ஆதாரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை – பொலிஸ் விளக்கம்

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது...

08 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சுன்னாகத்தில் பெண்ணின் தங்கச் சங்கிலி பறிப்பு: மைலிட்டி முகாம் இராணுவச் சிப்பாய் அதிரடிக் கைது!

யாழ்ப்பாணம், சுன்னாகம் நகரப் பகுதியில் நேற்று (25) காலை பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற...