10 5 scaled
உலகம்செய்திகள்

கனடாவில் 2024 ஜனவரியில் அமுலுக்கு வரும் விதி: சர்வதேச மாணவர்களுக்கு சிக்கல்

Share

கனடாவில் 2024 ஜனவரியில் அமுலுக்கு வரும் விதி: சர்வதேச மாணவர்களுக்கு சிக்கல்

கனடாவில் கல்வி கற்பதற்காகச் செல்லும் இந்திய மாணவர்கள் உட்பட சர்வதேச மாணவர்களில் பலர், அங்கு பார்க்கும் பகுதி நேர வேலை மூலம் வரும் வருவாயை வைத்துத்தான் தங்கள் செலவுகளை கவனித்துக்கொள்கிறார்கள்.

இதற்கு முன், சர்வதேச மாணவர்கள் வாரம் ஒன்றுக்கு 20 மணி நேரம் மட்டுமே வேலை பார்க்க அனுமதி என்னும் கட்டுப்பாடு இருந்தது.

கனடா முழுவதும் பணியாளர் பற்றாக்குறை நிலவியதால், 2022ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், அந்தக் கட்டுப்பாட்டை நீக்குவதாக பெடரல் அரசு அறிவித்தது. அதாவது, சர்வதேச மாணவர்கள், வாரம் ஒன்றிற்கு 20 மணி நேரத்துக்கும் கூடுதலான நேரம் பணி செய்ய அனுமதியளிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த அனுமதி, அதாவது, சர்வதேச மாணவர்கள் 20 மணி நேரத்துக்கும் கூடுதலான நேரம் வேலை பார்க்கலாம் என்று அனுமதியளிக்கப்பட்ட விதி, 2023 டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது.

ஆகவே, இந்திய மாணவர்கள் உட்பட சர்வதேச மாணவர்கள் அடுத்து என்ன செய்வோம் என இப்போதே கவலைப்படத் துவங்கிவிட்டார்கள்.

மெமோரியல் பல்கலையில் வர்த்தகம் பயில்கிறார் இஷாக் (Ishak Ibtida) என்னும் சர்வதேச மாணவர். சர்வதேச மாணவர்கள் 20 மணி நேரத்துக்கும் கூடுதலான நேரம் வேலை பார்க்கலாம் என்று அனுமதியளிக்கப்பட்ட விதி முடிவுக்கு வருவதால், தான் தற்போது நாளொன்றிற்கு பல மணி நேரம் வேலை செய்யும் நிறுவனத்தால் இனி தனக்கு வேலை தரமுடியாது என்கிறார் அவர்.

அத்துடன், வெறும் 20 மணி நேரம் தான் வேலை பார்ப்பதால் கிடைக்கும் வருவாய், தனது அறை வாடகைக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று கூறும் இஷாக், அப்படியானால், மளிகை மற்றும் பிற செலவுகளுக்கு நான் என்ன செய்வேன் என்கிறார்.

ஆக, கனடாவுக்கு கல்வி கற்க வந்த நான், அடுத்த மாதத்திலிருந்து வருவாய்க்கு என்ன செய்வது என்ற கவலை உருவாகிவிட்டதால், படிப்பிலும் கவனம் செலுத்தமுடியாமல் தவித்து வருவதாக தெரிவிக்கிறார் அவர்.

ஒன்றில் கனடா சர்வதேச மாணவர்களுக்கான கல்விக்கட்டணம் முதலான கட்டணங்களைக் குறைக்கவேண்டும், அல்லது இப்படி, இவ்வளவு நேரம்தான் வேலை செய்யவேண்டும் என்ற கட்டுப்பாட்டையாவது நீக்கவேண்டும், இந்த 20 மணி நேர வேலை அனுமதி போதாது என்கிறார் இஷாக்.

 

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....