15 2
உலகம்செய்திகள்

ஹமாஸ் தலைவர் படுகொலை தொடர்பில் வெளியான தகவல்

Share

ஹமாஸ் தலைவர் படுகொலை தொடர்பில் வெளியான தகவல்

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) 7 கிலோ எடையுள்ள குறுகிய தூர ஏவுகணையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக ஈரான் புரட்சிகர காவலர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹமாஸ் (Hamas) இயக்கத்தின் அரசியல் துறைப் பிரதானியும் அமைப்பின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவருமான இஸ்மாயில் ஹனியா ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

இஸ்மாயில் ஹனியா கொல்லப்பட்ட சம்பவம் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையிலேயே, ஈரான் புரட்சிகர காவலர்கள் அமைப்பு இஸ்மாயில் ஹனியாவை தாக்கிய ஏவுகணை தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளது.

அத்துடன், இஸ்ரேலுக்கு தகுந்த நேரத்தில் இதற்கான பதிலடி வழங்கப்படும் என குறித்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இஸ்மாயிலின் மரணத்திற்கு பயங்கரவாத சியோனிச ஆட்சியே காரணம் என்றும் ஈரான் புரட்சிகர காவலர்கள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...