tamilni 290 scaled
இந்தியாஉலகம்செய்திகள்

விமானத்தில் இரத்த வாந்தி எடுத்து பயணி உயிரிழப்பு

Share

விமானத்தில் இரத்த வாந்தி எடுத்து பயணி உயிரிழப்பு

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார்.

மும்பையில் இருந்து திங்கட்கிழமை(21.08.2023) ராஞ்சிக்கு சென்ற இண்டிகோ விமானத்திலே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

சிகேடி மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த 62 வயதான அந்த நபருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அந்த பயணிக்கு திடீரென இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவசரகால சூழ்நிலையில் விமானம் நாக்பூரில் தரையிறக்கப்பட்டது.

விமான நிலையத்தில் அவர் இறக்கிவிடப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்டவர் உடனடியாக கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...