24 66205b893d3d7
இந்தியாஉலகம்செய்திகள்

இந்தியாவின் சனத்தொகை எவ்வளவு தெரியுமா

Share

இந்தியாவின் சனத்தொகை எவ்வளவு தெரியுமா

இந்தியாவில் மொத்த மக்கள் தொகை 144.17 கோடியாக இருக்கும் எனவும் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது எனவும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) தெரிவித்துள்ளது.

உலக மக்கள் தொகை விபரத்தை ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் வெளியிட்ட நிலையிலேயே மேற்படி தகவல் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 24 சதவிகிதம் பேர் 0-14 வயதிற்கு உட்பட்டவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. 10 முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்கள் 17 சதவிகிதம் பேர் உள்ளனர். 10 முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் 26 சதவிகிதம் பேரும், 15 முதல் 64 வயதிற்கு உட்பட்டவர்கள் 68 சதவிகிதம் பேரும் உள்ளனர். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 7 சதவிகிதம் பேர் 65 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்களாக உள்ளனர்.

இந்தியாவில் ஆண்கள் சராசரியாக 71 வயது வரையும், பெண்கள் சராசரியாக 74 வயது வரையும் வாழ்கின்றனர்.

பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் தொடர்பாக கடந்த 30 ஆண்டுகளாக ஏற்பட்ட முன்னேற்றம் உலக அளவில் ஒடுக்கப்பட்ட சமூகங்களை புறக்கணித்துள்ளது தெரியவந்துள்ளது.

2006 முதல் 2023 வரையில் இந்தியாவில் குழந்தை திருமணம் 23 சதவிகிதமாக உள்ளது. பிரசவத்தின்போது ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியாவில் பெருமளவு குறைந்துள்ளது. உலக அளவில் பிரசவத்தின்போது ஏற்படும் உயிரிழப்புகளில் 8 சதவிகிதம் இந்தியாவில் நடைபெறுகிறது.பிரசவத்தின் போது தினமும் சராசரியாக 800 பெண்கள் உயிரிழக்கின்றனர். இந்த சராசரி 2016ஆம் ஆண்டு முதல் மாறாமல் உள்ளது.

இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் வேலை, செய்யும் இடங்களில் ஜாதி ரீதியில் பாகுபாடு காட்டப்படும் பெண்களுக்கான சட்ட பாதுகாப்பை வழங்க தலித் சமூக ஆர்வலர்கள் போராடுகின்றனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலித் சமூகத்தை சேர்ந்த பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் ஜாதி ரீதியிலான வன்முறைக்குள்ளாகுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சராசரியாக 4ல் ஒரு பெண் தனது துணை (கணவர், காதலன்) பாலியல் உறவுக்கு அழைத்தால் அப்பெண்ணால் முடியாது என்று கூற முடியாத சூழ்நிலை உள்ளது. கருத்தடை செய்வது குறித்து சராசரியாக 10இல் ஒரு பெண்ணால் சொந்தமாக முடிவு எடுக்க முடியவில்லை இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
11 1
செய்திகள்உலகம்

மார்ச் 3-இல் தோன்றும் ‘இரத்த நிலவு’: 58 நிமிடங்கள் நீடிக்கும் 2026-இன் முதல் சந்திர கிரகணம்!

2026 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் எதிர்வரும் மார்ச் 3-ஆம் திகதி நிகழவுள்ளதாக சர்வதேச...

goldsteal cleanup
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலவாக்கலையில் நூதனத் திருட்டு – சிசிடிவி காட்சி வெளியீடு!

தலவாக்கலை பிரதான நகரில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில், நேற்று (24) பகல் வேளையில் வாடிக்கையாளர்...

10 1
செய்திகள்உலகம்

கால்பந்து மைதானம் அளவுள்ள பிரம்மாண்ட பவளம்! கிரேட் பேரியர் ரீஃபில் தாய்-மகள் குழுவின் வரலாற்றுச் சாதனை.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில், இதுவரை ஆவணப்படுத்தப்பட்டவற்றிலேயே உலகின் மிகப்பெரிய பவளக் காலனியை...

09 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் பின்னணி: முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே அதிரடி கைது – 72 மணிநேரத் தடுப்புக் காவல்!

இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான தாக்குதலான 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில், முன்னாள்...