1 19 1 scaled
உலகம்செய்திகள்

கனடாவிற்கு பயங்கரவாதத்தில் ஈடுபட..ஸ்பான்சர் விசா மூலம் அழைத்துச் செல்லப்படும் இந்தியர்கள்?

Share

கனடாவிற்கு பயங்கரவாதத்தில் ஈடுபட..ஸ்பான்சர் விசா மூலம் அழைத்துச் செல்லப்படும் இந்தியர்கள்?

காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய இளைஞர்களை மூளைச்சலவை செய்து, கனடாவுக்கு பயங்கரவாதத்தில் ஈடுபட அழைத்துச் செல்வதாக இந்திய உளவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

கனடாவில் காலிஸ்தான் ஆதரவுப் படையை உருவாக்க பயங்கரவாதிகள் முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் வேலை இல்லாமல் பரிதவித்து வரும் இளைஞர்கள் குறிவைக்கப்படுவதாக கூறுகிறது இந்திய உளவுத்துறை.

கனடாவுக்கு செல்ல விருப்பம் தெரிவிக்கும் இளைஞர்களுக்காக ஸ்பான்சர் விசாக்கள் தயார் செய்யப்பட்டு, குருத்வாராக்களில் பணி, நடுத்தர திறன் படைத்த வேலை போன்றவற்றில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் சேர்த்து விடுகிறார்கள்.

மேலும், கனடாவில் சட்டவிரோதமாக குடியேறிய மற்றும் அங்கு படிப்பை முடித்து சரியான வேலை கிடைக்காமல் அங்கு தங்கியிருக்கும் இந்திய மாணவர்கள் எளிதில் இவர்களின் வலைக்குள் விழுந்து விடுகிறார்கள் என்றும் இந்திய உளவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

கனடாவைச் சேர்ந்த சில ஏஜென்சிகள் இந்த மனித கடத்தல் வேலையை செய்து வருவதாகவும், கடந்த 50 ஆண்டுகளாகவே கனடா மண்ணில் பயங்கரவாத, பிரிவினைவாத நடவடிக்கைகளில் காலிஸ்தான் ஆதவு சக்திகள் ஈடுபட்டு வருவதாக உளவுத்துறை கூறுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...