1 19 1 scaled
உலகம்செய்திகள்

கனடாவிற்கு பயங்கரவாதத்தில் ஈடுபட..ஸ்பான்சர் விசா மூலம் அழைத்துச் செல்லப்படும் இந்தியர்கள்?

Share

கனடாவிற்கு பயங்கரவாதத்தில் ஈடுபட..ஸ்பான்சர் விசா மூலம் அழைத்துச் செல்லப்படும் இந்தியர்கள்?

காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய இளைஞர்களை மூளைச்சலவை செய்து, கனடாவுக்கு பயங்கரவாதத்தில் ஈடுபட அழைத்துச் செல்வதாக இந்திய உளவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

கனடாவில் காலிஸ்தான் ஆதரவுப் படையை உருவாக்க பயங்கரவாதிகள் முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் வேலை இல்லாமல் பரிதவித்து வரும் இளைஞர்கள் குறிவைக்கப்படுவதாக கூறுகிறது இந்திய உளவுத்துறை.

கனடாவுக்கு செல்ல விருப்பம் தெரிவிக்கும் இளைஞர்களுக்காக ஸ்பான்சர் விசாக்கள் தயார் செய்யப்பட்டு, குருத்வாராக்களில் பணி, நடுத்தர திறன் படைத்த வேலை போன்றவற்றில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் சேர்த்து விடுகிறார்கள்.

மேலும், கனடாவில் சட்டவிரோதமாக குடியேறிய மற்றும் அங்கு படிப்பை முடித்து சரியான வேலை கிடைக்காமல் அங்கு தங்கியிருக்கும் இந்திய மாணவர்கள் எளிதில் இவர்களின் வலைக்குள் விழுந்து விடுகிறார்கள் என்றும் இந்திய உளவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

கனடாவைச் சேர்ந்த சில ஏஜென்சிகள் இந்த மனித கடத்தல் வேலையை செய்து வருவதாகவும், கடந்த 50 ஆண்டுகளாகவே கனடா மண்ணில் பயங்கரவாத, பிரிவினைவாத நடவடிக்கைகளில் காலிஸ்தான் ஆதவு சக்திகள் ஈடுபட்டு வருவதாக உளவுத்துறை கூறுகிறது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...