tamilni 221 scaled
உலகம்செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளி இளைஞர் சுட்டுக்கொலை

Share

கனடாவில் இந்திய வம்சாவளி இளைஞர் சுட்டுக்கொலை

கனடா – பிரிட்டிஷ் கொலம்பியாவில் இந்திய வம்சாவளி இளைஞரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், கடந்த சனிக்கிழமை இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கனடா – (Abbotsford) இல் வசித்து வந்த 29 வயதுடைய ககன்தீப் என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து ஆறு கிலோமீற்றர் தொலைவில், கார் ஒன்றும் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில், இதுபோன்ற குற்றச்செயலைச் செய்துவிட்டு, அந்த குற்றச்செயலில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை தீவைத்து எரிக்கும் ஒரு கும்பல் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ககன்தீப் கொலைக்கும் அந்த கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...