gala
உலகம்கலாசாரம்செய்திகள்

அமெரிக்காவின் சுதந்திரம் – தங்க ஆடையில் ஜொலித்த இந்தியப் பெண்

Share

அமெரிக்காவின் சுதந்திரம் – தங்க ஆடையில் ஜொலித்த இந்தியப் பெண்

ஆண்டுதோறும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் மெட் காலா பஷன் நிகழ்ச்சி உலகப்புகழ் பெற்றது.

2021 ஆம் ஆண்டுக்கான ‘மெட் காலா’ அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.

“அமெரிக்காவின் சுதந்திரம்“ என்ற கருப்பொருளைக் கொண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அரசியல், சினிமா, விளையாட்டு போன்ற பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் பாடகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் இந்தியாவில் இருந்து பிரபல தொழிலதிபர் மேகா கிருஷ்ணனின் மனைவி சுதா ரெட்டி முதல்முறையாகக் கலந்துகொண்டுள்ளார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் 250 கிலோ எடைகொண்ட ஆடையை அணிந்திருந்தார். அந்த ஆடை முழுக்க முழுக்க தங்கம் மற்றும் வைரங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

sudhareddy

இதேவேளை, பிரபல மாடலான கிம் காதஷியன், கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கறுப்பு நிற ஆடையை அணிந்து கலந்துகொண்டார். இது பெரிதும் வரவேற்பை பெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்ட அமெரிக்காவின் இளம் எம்.பியான அலெக்சாண்டிரியா ஒகாசியோ கார்டஸ் பேஷன் நிகழ்ச்சியை அரசியல் பேசும் இடமாக மாற்றி பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார்.

பல நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் பங்குபற்றும் இந்த நிகழ்வு நியூயோர்க்கில் உள்ள பிரபல கலை அருங்காட்சியத்துக்கு நிதி திரட்டுவதற்காக 1948 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் நிகழ்வாகும்.

வருடாவருடம் இடம்பெற்று வரும் இந்த நிகழ்வு, கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஒத்திவைக்கபட்ட நிலையில் இவ்வாண்டு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

sep17metgala6

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...