28 11
உலகம்செய்திகள்

ரஷ்ய ஆயுதக் கிடங்கு மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்

Share

ரஷ்ய ஆயுதக் கிடங்கு மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்

ரஷ்யாவின் (Russia) – ட்வெர் பகுதியில் ஏவுகணைகள், குண்டுகள் மற்றும் பீரங்கி குண்டுகளை சேமித்து வைத்திருந்த ஆயுத கிடங்கை உக்ரைன் ஆளில்லா விமான (drone) தாக்குதல் மூலம் அழித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ட்வெர் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ரஷ்யாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதியில் உள்ள நிகோபோல் நகரின் மீது ரஷ்ய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 03பேர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குர்ஸ்க் (Kursk) பிராந்தியத்தில் உக்ரேனியப் படைகளால் கைப்பற்றப்பட்ட பிரதேசத்தை மீட்பதற்கான ரஷ்யாவின் எதிர்த்தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது என அப்பகுதியில் அமைக்கப்பட்ட உக்ரைனின் இராணுவ நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

குர்ஸ்க், பிரையன்ஸ்க், ஸ்மோலென்ஸ்க் மற்றும் பெல்கோரோட் பகுதிகளில் உக்ரைன் எல்லை மற்றும் அண்டை நாடான ஓரியோல் பகுதியில் 27 உக்ரேனியஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...