அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்மமான முறையில் மரணம்

24 66119749a2fac

அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்மமான முறையில் மரணம்

அமெரிக்காவின் ஒகையோ மாகாணத்தில் உள்ள கிளவ்லேண்ட் நகரில் கல்வி பயின்று வந்த இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உமா சத்யசாய் கத்தே என்ற மாணவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மரணம் இந்த ஆண்டில் அமெரிக்காவில் இடம்பெற்ற 10-வது சம்பவம் என குறிப்பிடப்படுகிறது.

மேலும் இந்த தகவலை நிவ்யோர்க்கில் உள்ள இந்திய தூதரகம், உறுதி செய்துள்ளது.

உமா சத்யசாயை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்து கொள்வதாகவும், அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர, அனைத்து உதவிகளும் குடும்பத்திற்கு செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.

இதேவேளை இந்திய மாணவரின் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version