இந்தியாஉலகம்செய்திகள்

இந்திய பெற்றோருக்கு அமெரிக்காவுக்குள் அனுமதி மறுப்பு: பயந்தது போலவே நடந்துவிட்டது

20 27
Share

இந்திய பெற்றோருக்கு அமெரிக்காவுக்குள் அனுமதி மறுப்பு: பயந்தது போலவே நடந்துவிட்டது

ட்ரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விடயம் இந்திய புலம்பெயர் சமுதாயத்தினரிடையே பதற்றத்தை உருவாக்கியிருந்தது.

புலம்பெயர்தல் விதிகளில், குறிப்பாக H1-B விசா போன்ற விடயங்களில் அவர் என்ன மாற்றம் செய்வாரோ என்றெல்லாம் கவலையடைந்திருந்தார்கள் அவர்கள்.

இந்நிலையில், அவர்கள் பயந்ததுபோலவே ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

Mirchi9 என்னும் ஊடகம் வெளியிட்டுள்ள அந்த செய்தியில், அமெரிக்காவில் வாழும் தங்கள் பிள்ளைகளை சந்திப்பதற்காக ஒரு இந்திய பெற்றோர் அமெரிக்கா சென்றதாகவும், Newark விமான நிலையத்தில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, அவர்கள் ஐந்து மாதங்கள் தங்கள் பிள்ளைகளுடன் அமெரிக்காவில் தங்கும் நோக்கில், B-1/B-2 visitor visaக்களுடன் பயணித்துள்ளார்கள்.

ஆனால், அவர்களிடம் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லும் return ticket இல்லை.

2025 விதிகளின்படி return ticket கட்டாயம் என அவர்களிடம் புலம்பெயர்தல் துறை அலுவலர்கள் கூறியுள்ளார்கள்.

அத்துடன், அவர்கள் அங்கிருந்தே நேரடியாக இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக அந்த செய்தி கூறுகிறது.

இந்த விடயம், அமெரிக்காவுக்குப் பயணிக்கும் இந்திய பயணிகளுக்கு குழப்பத்தை உருவாக்கியுள்ளது. காரணம், அதிகாரப்பூர்வமாக அப்படி ஒரு அறிவிப்பு அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...