12 9
உலகம்செய்திகள்

வெளிநாடொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்

Share

வெளிநாடொன்றில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்

அபுதாபி ஜாயித் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லியை நோக்கி புறப்பட்ட விமானமொன்றில் மேலே பறந்த சில நிமிடங்களில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால் விமானிகள் மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினர்.அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு இண்டிகோ விமானத்தை மஸ்கட்டில் தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டது.

தொடர்ந்து விமானம் பத்திரமாக அங்கு தரையிறக்கப்பட்டதோடு பின்னர், பயணிகள் அனைவரும் மஸ்கட்டில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் எனவும். பயணிகளுக்கு இடையூறு மற்றும் தடங்கல் ஏற்பட்டதற்கு வருந்துவதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விமானம் மஸ்கட்டில் தேவையான பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததும் மீண்டும் வானில் பறக்க அனுமதிக்கப்படும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....