5
உலகம்செய்திகள்

கேள்விக்குறியான இந்திய தம்பதியினரின் கனேடிய குடியுரிமை

Share

கேள்விக்குறியான இந்திய தம்பதியினரின் கனேடிய குடியுரிமை

கனடா (Canada) – ஜாஸ்பர் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால் ஒரு இந்திய தம்பதியினருக்கு கனேடிய நிரந்தர குடியுரிமை பெறுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியர்களான (India) ரமன்தீப் சிங் என்பவரும் (28) அவரது மனைவியான சிம்ரன் சத்வாலும் (28) கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள ஜாஸ்பர் நகருக்கு 2023ஆம் ஆண்டு குடிபெயர்ந்துள்ளார்கள்.

இந்நிலையில், ஜாஸ்பர் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால், உட்பட அங்கு வாழ்ந்த சுமார் 25,000 பேர் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

மேலும், அவர்கள் அந்நாட்டு நிரந்தர குடியிருப்பு அனுமதியினை பெற்று அங்கேயே வசிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக, அவர்களின் கனேடிய நிரந்தர குடியுரிமை பெற்றுக் கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, ரமன்தீப்பின் பணி உரிமம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதியுடன் காலாவதி ஆகவுள்ளதுடன் அதை நீட்டிக்க அவர் விண்ணப்பம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பணி உரிமை புதுப்பித்தல் ஆவணங்கள், தீயில் எரிந்திருக்கலாம் என்ற சந்தேகம் ரமன்தீப்பை போல, அங்கு தற்காலிக பணியாளர்களாக பணி செய்து வந்த வெளிநாட்டவர்கள் சிலருக்கும் உருவாகியுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 32
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – கொரியா இடையே பொருளாதார ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை: கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இலங்கை அரசாங்கத்திற்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான 2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதி (EDCF)...

Untitled 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இனமலுவ ஊரக வங்கியில் துணிகர கொள்ளை: 20 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு

ரங்கிரி தம்புள்ளை பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான இனமலுவ ஊரக வங்கிக் கிளையில், மர்ம நபர்கள்...

Untitled 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

என்.டி.பி வங்கியில் ரூ. 13.2 பில்லியன் மோசடி: மத்திய வங்கியின் கண்காணிப்பு தோல்வி குறித்துப் பாராளுமன்றத்தில் கேள்வி

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) குறிப்பிட்ட ஒரு பிரிவில் சுமார் 13.2 பில்லியன் ரூபாய் மதிப்பிலான...

Untitled 29
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வித்யா படுகொலை வழக்கு: ஸ்விஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கடந்த 2015-ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப்...