5
உலகம்செய்திகள்

கேள்விக்குறியான இந்திய தம்பதியினரின் கனேடிய குடியுரிமை

Share

கேள்விக்குறியான இந்திய தம்பதியினரின் கனேடிய குடியுரிமை

கனடா (Canada) – ஜாஸ்பர் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால் ஒரு இந்திய தம்பதியினருக்கு கனேடிய நிரந்தர குடியுரிமை பெறுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியர்களான (India) ரமன்தீப் சிங் என்பவரும் (28) அவரது மனைவியான சிம்ரன் சத்வாலும் (28) கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள ஜாஸ்பர் நகருக்கு 2023ஆம் ஆண்டு குடிபெயர்ந்துள்ளார்கள்.

இந்நிலையில், ஜாஸ்பர் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால், உட்பட அங்கு வாழ்ந்த சுமார் 25,000 பேர் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

மேலும், அவர்கள் அந்நாட்டு நிரந்தர குடியிருப்பு அனுமதியினை பெற்று அங்கேயே வசிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக, அவர்களின் கனேடிய நிரந்தர குடியுரிமை பெற்றுக் கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, ரமன்தீப்பின் பணி உரிமம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதியுடன் காலாவதி ஆகவுள்ளதுடன் அதை நீட்டிக்க அவர் விண்ணப்பம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பணி உரிமை புதுப்பித்தல் ஆவணங்கள், தீயில் எரிந்திருக்கலாம் என்ற சந்தேகம் ரமன்தீப்பை போல, அங்கு தற்காலிக பணியாளர்களாக பணி செய்து வந்த வெளிநாட்டவர்கள் சிலருக்கும் உருவாகியுள்ளது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...