29 1
உலகம்செய்திகள்

இராஜதந்திர முறுகலுக்கு மத்தியில் இந்திய – கனேடிய பிரதமர்கள் சந்திப்பு

Share

இராஜதந்திர முறுகலுக்கு மத்தியில் இந்திய – கனேடிய பிரதமர்கள் சந்திப்பு

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர முறுகல்களுக்கு மத்தியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் (Narendra Modi), கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் (Justin Trudeau) இத்தாலியில் (Italy) வைத்து சந்தித்துள்ளனர்.

அபுலியாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டுக்கு சென்ற, இருவரும் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் இந்த சந்திப்பை நடத்தியுள்ளனர்.

காலிஸ்தானிய தீவிரவாத பிரச்சினைகளால், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்த பின்னர், இரண்டு நாட்டு பிரதமர்களும் சந்தித்துள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்தநிலையில் எதிர்வரும் காலங்களில், முக்கியமான பிரச்சினைகளைச் சமாளிப்பதற்காக ஒன்றிணைந்து செயல்படுவதற்கான அர்ப்பணிப்பாக இந்த சந்திப்பு அமைந்ததாக கனேடிய பிரதமர் ட்ரூடோ கூறியுள்ளார்.

கனடாவில் இடம்பெற்ற காலிஸ்தானிய தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில், இந்தியாவின் புலனாய்வுப்பிரிவின் தொடர்பு இருப்பதாக ட்ரூடோ தெரிவித்ததை அடுத்து, கடந்த செப்டெம்பர் மாதம் முதல் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான முறுகல் அதிகரித்து வந்துள்ளது.

Share
தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...