29 1
உலகம்செய்திகள்

இராஜதந்திர முறுகலுக்கு மத்தியில் இந்திய – கனேடிய பிரதமர்கள் சந்திப்பு

Share

இராஜதந்திர முறுகலுக்கு மத்தியில் இந்திய – கனேடிய பிரதமர்கள் சந்திப்பு

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர முறுகல்களுக்கு மத்தியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் (Narendra Modi), கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் (Justin Trudeau) இத்தாலியில் (Italy) வைத்து சந்தித்துள்ளனர்.

அபுலியாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டுக்கு சென்ற, இருவரும் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் இந்த சந்திப்பை நடத்தியுள்ளனர்.

காலிஸ்தானிய தீவிரவாத பிரச்சினைகளால், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்த பின்னர், இரண்டு நாட்டு பிரதமர்களும் சந்தித்துள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்தநிலையில் எதிர்வரும் காலங்களில், முக்கியமான பிரச்சினைகளைச் சமாளிப்பதற்காக ஒன்றிணைந்து செயல்படுவதற்கான அர்ப்பணிப்பாக இந்த சந்திப்பு அமைந்ததாக கனேடிய பிரதமர் ட்ரூடோ கூறியுள்ளார்.

கனடாவில் இடம்பெற்ற காலிஸ்தானிய தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில், இந்தியாவின் புலனாய்வுப்பிரிவின் தொடர்பு இருப்பதாக ட்ரூடோ தெரிவித்ததை அடுத்து, கடந்த செப்டெம்பர் மாதம் முதல் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான முறுகல் அதிகரித்து வந்துள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...