உலகம்செய்திகள்

இராஜதந்திர முறுகலுக்கு மத்தியில் இந்திய – கனேடிய பிரதமர்கள் சந்திப்பு

Share
29 1
Share

இராஜதந்திர முறுகலுக்கு மத்தியில் இந்திய – கனேடிய பிரதமர்கள் சந்திப்பு

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர முறுகல்களுக்கு மத்தியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் (Narendra Modi), கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் (Justin Trudeau) இத்தாலியில் (Italy) வைத்து சந்தித்துள்ளனர்.

அபுலியாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டுக்கு சென்ற, இருவரும் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் இந்த சந்திப்பை நடத்தியுள்ளனர்.

காலிஸ்தானிய தீவிரவாத பிரச்சினைகளால், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்த பின்னர், இரண்டு நாட்டு பிரதமர்களும் சந்தித்துள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்தநிலையில் எதிர்வரும் காலங்களில், முக்கியமான பிரச்சினைகளைச் சமாளிப்பதற்காக ஒன்றிணைந்து செயல்படுவதற்கான அர்ப்பணிப்பாக இந்த சந்திப்பு அமைந்ததாக கனேடிய பிரதமர் ட்ரூடோ கூறியுள்ளார்.

கனடாவில் இடம்பெற்ற காலிஸ்தானிய தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில், இந்தியாவின் புலனாய்வுப்பிரிவின் தொடர்பு இருப்பதாக ட்ரூடோ தெரிவித்ததை அடுத்து, கடந்த செப்டெம்பர் மாதம் முதல் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான முறுகல் அதிகரித்து வந்துள்ளது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...