31
உலகம்செய்திகள்

45 இந்தியர்களின் உடல்களுடன் குவைத்திலிருந்து புறப்பட்ட IAF விமானம்

Share

45 இந்தியர்களின் உடல்களுடன் குவைத்திலிருந்து புறப்பட்ட IAF விமானம்

45 இந்தியர்களின் உடல்களை ஏற்றிக்கொண்டு குவைத்திலிருந்து சிறப்பு விமானம் புறப்பட்டது.

குவைத்தின் மங்காப் நகரில் புதன்கிழமை (ஜூன் 12) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் சிறப்பு விமானமான சி-130ஜே இந்தியா புறப்பட்டது.

அதிகபட்சமாக 23 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், காலை 11 மணியளவில் இது கேரளாவின் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கும். அதன் பிறகு அந்த விமானம் டெல்லிக்கு வரும்.

உயிரிழந்த மற்ற 22 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர், ஆந்திரப் பிரதேசம், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தலா 3 பேர், பீகார், ஒடிசா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர். மற்றொருவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

விபத்துக்குப் பிறகு, இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் குவைத் சென்றிருந்தார். காயமடைந்த இந்தியர்கள் சிகிச்சை பெற்று வரும் ஐந்து மருத்துவமனைகளை அவர்கள் பார்வையிட்டனர்.

இறந்தவர்களின் உடல்கள் கொண்டு வரப்பட்ட அதே விமானத்தில் இன்று கீர்த்திவர்தன் சிங் திரும்புகிறார்.

ஜூன் 12 அன்று, குவைத்தின் மங்காப் நகரில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 48 பேரின் உடல்கள் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டது, அதில் 45 பேர் இந்தியர்கள் என்றும், 3 பேர் பிலிப்பைன்ஸை சேர்ந்தவர்கள் என்றும் கண்டறியப்பட்டது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...