rtjy 220 scaled
உலகம்செய்திகள்

இந்தியாவின் செயலால் உருவாகியுள்ள புதிய பிரச்சினை

Share

இந்தியாவின் செயலால் உருவாகியுள்ள புதிய பிரச்சினை

கனேடிய தூதரக அதிகாரிகளை இந்தியா வெளியேற்றியுள்ளதால், இந்தியர்களுக்கான விசா பரிசீலனை தாமதமாகும் என கனடா புலம்பெயர்தல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் 18ஆம் திகதி, சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவில் கொல்லப்பட்ட நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.

அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் எடுத்த நடவடிக்கைகளால், இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில், கனேடிய தூதரக அதிகாரிகள் 41பேரை இந்தியாவிலிருந்து வெளியேற்றுமாறு இந்தியா கனடாவை அறிவுறுத்தியது. அதன்படி, அவர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறிவிட்டதாக கனடா வெளி விவகாரங்கள் துறை அமைச்சரான Mélanie Joly தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சரான Marc Miller, கனேடிய தூதரக அதிகாரிகள் இந்தியாவிலிருந்து வெளியேறியுள்ளதைத் தொடர்ந்து, கனடா வர விரும்பும் இந்தியர்களுக்கான விசா பரிசீலனை தாமதமாகும் என்று கூறியுள்ளார்.

கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பும், இந்தியாவில் அதன் அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைக்க இருப்பதாக புலம்பெயர்தல் துறை அமைச்சரான Marc Miller தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் இந்தியாவில் கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் அதிகாரிகள் 27 பேர் இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை வெறும் 5ஆக குறைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியர்கள் கனடா விசா பெறுவதற்கான நடவடிக்கைகளை, இந்தியாவிலிருக்கும் கனேடிய அதிகாரிகளும் செய்யவேண்டியிருக்கும். அப்படிப்பட்ட நிலையில், இந்தியாவில் கனேடிய அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதால், இனி இந்தியர்களின் விசா பரிசீலனை தாமதமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

கனேடிய தூதரக அதிகாரிகளை இந்தியா வெளியேற்றியுள்ளதால் உருவாகியுள்ள புதிய பிரச்சினை | India Visa Processing Will Slow

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...