34
இந்தியாஉலகம்செய்திகள்

கடுமையான பங்குச்சரிவை சந்தித்துள்ள இந்தியாவின் அதானி குழுமம்

Share

கடுமையான பங்குச்சரிவை சந்தித்துள்ள இந்தியாவின் அதானி குழுமம்

ஹிண்டன்பேர்க் ஆய்வு நிறுவன அறிக்கையால், இந்தியாவின் அதானி குழுமம், நேற்று மும்பாயில் மிகக் கடுமையான பங்கு சரிவைச் சந்தித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நேற்றைய வர்த்தக முடிவில் அதானி குழுமத்திற்கு 2.4 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 20,400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பேர்க் நிறுவனம், அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், ‘அதானி குழுமம் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் பங்குச் சந்தை ஒழுங்குமுறை சபையான செபியின் தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோர் பங்குகளை வைத்திருப்பதாக குற்றம் சுமத்தியிருந்தது.

மொரீசியஸ் மற்றும் பெர்முடா நாடுகளில் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி தொடர்புடைய போலி நிறுவனத்திலேயே செபியின் தலைவர் மாதபியும், அவரது கணவரும் பங்குகள் வைத்திருந்தனர் எனக் குற்றம் சாட்டியது.

இதன் காரணமாகவே அதானியின் சந்தேகத்துக்குரிய நிறுவனங்கள் மீது செபி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் காரணமாகவே அதானி குழுமம் பங்கு பாரிய சரிவை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்த அதானி குழுமம், ஹிண்டன்பேர்க்கின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் அற்றவை என மறுத்துள்ளது.

அதேபோல், செபியின் தலைவர் மாதபி புரியும், அவரது கணவரும் வெளியிட்ட அறிக்கையில், ‘ஹிண்டன்பேர்க்கின் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

தங்களுடைய வாழ்க்கையும், நிதி பரிமாற்றங்களும் திறந்த புத்தகம்போல வெளிப்படையானவை என்று அவர்கள் குறிப்பி;ட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...