38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

Share

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த மோதல் அணு ஆயுதப் போராக மாறக்கூடும் என்ற அச்சம் இருந்தது.

பாகிஸ்தானின் அணுசக்தி நிலையங்களுக்கு அருகில் இந்தியா தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் பரவிய நிலையில், அந்த பேச்சுக்கள் அனைத்தையும் இந்தியா மறுத்தது.

இந்தச் சூழலில், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் அணுசக்தி நிறுவல்களைத் தாக்குவதைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை எவ்வாறு நிறுவியுள்ளன என்பதைப் புரிந்துகொள்வது சுவாரஸ்யமாக இருக்கும்.

அணு ஆயுத நாடுகள் என்ற அந்தஸ்தை இந்தியாவும் பாகிஸ்தானும் அறிவித்ததிலிருந்து, அவை ஒருவருக்கொருவர் தாக்கும் தூரத்தில் உள்ள இரண்டு அணுசக்தி நாடுகளாகவே பார்க்கப்படுகிறது.

எந்தவொரு பேரழிவு விளைவுகளையும் தவிர்க்க, இரு நாடுகளும் தங்கள் அணுசக்தி அமைப்புகள் குறித்து ஒருவருக்கொருவர் தெரிவிக்க வழிமுறைகளை அமைத்துள்ளன.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அணுசக்தி அபாயங்களைக் குறைப்பதற்கு இரண்டு இருதரப்பு ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பரஸ்பர அணுசக்தி அமைப்புகள் பற்றிய வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது.

இதில் அணுசக்தி அமைப்புகள் மற்றும் வசதிகள் மீதான தாக்குதலைத் தடை செய்வதற்கான ஒப்பந்தம். இந்த ஒப்பந்தமானது 1988 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவுக்கும் இடையே கையெழுத்தானது.

இதனையடுத்து இரு நாடுகளின் பாராளுமன்றங்களும் அதை அங்கீகரித்த பிறகு, இந்த ஒப்பந்தம் 1991 ஜனவரி 27 அன்று அமுலுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று அணுசக்தி நிலையங்களை குறிவைத்து தாக்குவதையோ அல்லது மூன்றாம் நாடுகளுக்கு உதவுவதையோ தடை செய்கிறது.

லாகூர் புரிந்துணர்வு ஒப்பந்தம்: 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் திகதி பாகிஸ்தானின் லாகூரில் அப்போதைய இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கும் இடையே நடந்த அமைதி உச்சிமாநாட்டில் லாகூர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

குறிப்பாக 1998 ஆம் ஆண்டு இரண்டு தெற்காசிய நாடுகளும் நடத்திய அணு ஆயுத சோதனைகளுக்குப் பிறகு, அணுசக்தி அபாயங்களை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அங்கீகரித்தது.

மட்டுமின்றி, CBMகள் மற்றும் ஆயுதக் கட்டுப்பாட்டை வலியுறுத்தி, இரு தரப்பினரும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகள் குறித்து ஒருவருக்கொருவர் தெரிவிக்கவும், நெருக்கடிகளின் போது தவறான புரிதல்களைத் தவிர்க்க தகவல் தொடர்பு வழிகளை நிறுவவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் உறுதியளித்தது.

இதனால் தற்செயலான அணுசக்தி நெருக்கடிகளைத் தவிர்க்க முடியும். லாகூர் ஒப்பந்தத்தின்படி, இரு தரப்பினரும் தங்கள் வெளிவிவகார அமைச்சர்கள் தரப்பில் அவ்வப்போது சந்தித்து அணுசக்தி தொடர்பான பிரச்சினைகள் உட்பட கவலைக்குரிய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பார்கள் என்று முடிவு செய்தனர்.

இந்த இரு முதன்மையான ஒப்பந்தங்கள் மட்டுமின்றி, 2005 ஆம் ஆண்டு கையெழுத்தான பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சோதனைக்கான முன் அறிவிப்பு தொடர்பான ஒப்பந்தத்தை இரு நாடுகளும் கொண்டுள்ளன.

அத்துடன், 2007 ஆம் ஆண்டில், அணு ஆயுத விபத்துக்களால் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பது தொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

Share

Recent Posts

தொடர்புடையது
image 172a2f580a
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியின் அந்நியச் செலாவணி நிலைத்தன்மைக் கூற்றுக்கு ஆதாரமில்லை: புபுது ஜெயகொட குற்றச்சாட்டு!

இலங்கையின் இறக்குமதிகள் அதன் ஏற்றுமதி வருவாயை விட அதிகமாக வளர்ந்துள்ளதால், நாட்டின் செலுத்துமதி சமநிலை பற்றாக்குறை...

25 690d6d53c26d1
செய்திகள்அரசியல்இலங்கை

விலங்கு நலனுக்கு நிதி ஒதுக்கி, மருத்துவர்களைத் தக்கவைக்கத் தவறிவிட்டது – வைத்தியர் சமல் சஞ்சீவ கடும் விமர்சனம்!

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவரான வைத்தியர் சமல் சஞ்சீவ, 2026ஆம்...

25 690b4dc55879b
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுவது குறித்துப் பங்காளிக் கட்சிகளுடன் பேசியே முடிவெடுப்போம்: ரெலோ அறிவிப்பு!

மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் (Tamil National Alliance – TNA) செயற்படுவது தொடர்பில், பங்காளிக்...

l78020250411143138 1296x700 1
செய்திகள்உலகம்

சீனா-அமெரிக்கா வர்த்தகப் பதற்றம் தணிப்பு: முக்கிய உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடை தற்காலிக நீக்கம் – கிராஃபைட் கட்டுப்பாடுகளும் நிறுத்தம்!

சீனா, அமெரிக்காவுக்கான முக்கிய உலோகங்கள் மீதான தனது ஏற்றுமதித் தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை,...