R 11 1
உலகம்செய்திகள்

இந்தியா-மாலத்தீவு சர்ச்சை விவகாரம்: வைரலாகும் தோனி பேசிய வீடியோ

Share

மாலத்தீவு விவகாரம் இந்தியா முழுவதும் பேசு பொருளாக மாறி இருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Modi) அங்கிருந்த அழகிய கடற்கரை மற்றும் கடலுக்கடியில் நீந்தி சாகசம் செய்யும் புகைப்படத்தை X சமூக தளத்தில் வெளியிட்டார்.

மேலும் அமைதியும், அழகும் நிறைந்த லட்சத்தீவு(Lakshadweep) மனதை மயக்குவதாக உள்ளது என்றும், சாகசத்தை விரும்புபவராக இருந்தால் உங்களின் பயணத் திட்டத்தில் லட்சத்தீவை சேர்க்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து மாலத்தீவுக்கு மாற்றாக லட்சத்தீவை சுற்றுலாவுக்கு ஊக்குவிக்கும் விதமாக இந்திய பிரதமர் மோடி செயல் இருந்ததாக கருத்துகள் வெளியானது.

அதே சமயம் மாலத்தீவின் அமைச்சர்கள் சிலர் இந்தியா குறித்தும், பிரதமர் மோடி குறித்தும், இனவாதத்தை வெளிப்படுத்தும் வகையிலும் மோசமான கருத்துக்களை வெளியிட்டனர்.

இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையிலான எதிர்ப்பு அதிகரித்ததோடு, மாலத்தீவை புறக்கணியுங்கள் என்ற ஹேஸ்டேக்கும் X தளத்தில் டிரெண்டாகியது.

இந்நிலையில் சுற்றுலா தலங்கள் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், பயணம் செய்ய பிடித்த இடம் எது என்ற ரசிகர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தோனி, விளையாடுவதற்காக பல நாடுகளுக்கு செல்வது உண்டு, ஆனால் போட்டிகள் முடிவடைந்ததும் திரும்பி விடும் சூழல் மட்டுமே இருந்து வந்தது. இருப்பினும் என்னுடைய மனைவிக்கு பயணங்களில் அதிக விருப்பம் உண்டு,

தற்போது தான் நாங்கள் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளோம், நம் நாட்டில் நிறைய அழகான இடங்கள் உள்ளன, அவற்றை முதலில் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...