OIP 18
உலகம்செய்திகள்

பிரான்ஸ் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டதுமே உருவாகியுள்ள சர்ச்சை

Share

பிரான்சின் புதிய பிரதமராக, முன்னாள் கல்வித்துறை அமைச்சரான கேப்ரியல் அட்டால் என்பவர், ஜனாதிபதி இமானுவல் மேக்ரானால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், அவர் பொறுப்பேற்றதுமே சமூக ஊடகங்களில் அவருக்கெதிரான கருத்துக்கள் பரவி சர்ச்சையை உருவாக்கி வருகின்றன.

பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள கேப்ரியல், யூத குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். அவரது தந்தை யூதர், அவரது தாய் கிறிஸ்தவர்.

கேப்ரியலும் கிறிஸ்தவராக ஞானஸ்நானம் பெற்றவர். ஆனால், கேப்ரியலின் தந்தை, நீ உன் வாழ்நாள் முழுவதும் யூதனாகத்தான் பார்க்கப்படுவாய் என்றும், உன் பெயரின் இரண்டாவது பகுதியிலுள்ள பெயர் யூத பெயர் என்பதால், எப்போதும் யூத எதிர்ப்பை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்றும் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார் கேப்ரியல்.

கேப்ரியலின் தந்தை கூறியது உண்மையாகிவிட்டது. ஆம், சமுக ஊடகங்களில் கேப்ரியலுக்கு எதிரான யூத வெறுப்பு கருத்துக்கள் வெளியாகிவருகின்றன.

கேப்ரியல் சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டுவருவதை, பிரான்ஸ் யூத மாணவர்கள் யூனியன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

இப்படி விமர்சிப்பவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படவேண்டும் என்றும் அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 32
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – கொரியா இடையே பொருளாதார ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை: கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இலங்கை அரசாங்கத்திற்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான 2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதி (EDCF)...

Untitled 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இனமலுவ ஊரக வங்கியில் துணிகர கொள்ளை: 20 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு

ரங்கிரி தம்புள்ளை பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான இனமலுவ ஊரக வங்கிக் கிளையில், மர்ம நபர்கள்...

Untitled 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

என்.டி.பி வங்கியில் ரூ. 13.2 பில்லியன் மோசடி: மத்திய வங்கியின் கண்காணிப்பு தோல்வி குறித்துப் பாராளுமன்றத்தில் கேள்வி

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) குறிப்பிட்ட ஒரு பிரிவில் சுமார் 13.2 பில்லியன் ரூபாய் மதிப்பிலான...

Untitled 29
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வித்யா படுகொலை வழக்கு: ஸ்விஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கடந்த 2015-ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப்...