tamilni 553 scaled
இந்தியாஉலகம்செய்திகள்

இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலம் – மோடியால் திறந்து வைப்பு

Share

இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலம் – மோடியால் திறந்து வைப்பு

இந்தியாவின் மிக நீளமான கேபிள் ஸ்டேட் பாலமான சுதர்சன் சேது பாலம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இப்பாலமானது இன்று (25.2.2024) இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்திய மதிப்பில் 979 கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுமார் 2.32 கி.மீ நீளமுள்ள இந்த பாலம் தான் இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலம் என தெரிவிக்கப்படுகின்றது

குஜராத்தில் உள்ள துறைமுக நகரமான ஓகாவையும் பயத் துவாரகா தீவையும் இணைக்கும் பாலத்தின் மொத்த நீளம் 2.3 கி.மீ. பயட் துவாரகா தீவில் உள்ள கிருஷ்ணருக்கு கட்டப்பட்ட புகழ்பெற்ற துவாரகா கோயிலுக்கு செல்வதற்கு வசதியாக இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

சுதர்சன் சேது ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இதில் ஸ்ரீமத் பகவத் கீதையின் வசனங்கள் மற்றும் இருபுறமும் பகவான் கிருஷ்ணரின் படங்களால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதையை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...