tamilni 553 scaled
இந்தியாஉலகம்செய்திகள்

இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலம் – மோடியால் திறந்து வைப்பு

Share

இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலம் – மோடியால் திறந்து வைப்பு

இந்தியாவின் மிக நீளமான கேபிள் ஸ்டேட் பாலமான சுதர்சன் சேது பாலம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இப்பாலமானது இன்று (25.2.2024) இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்திய மதிப்பில் 979 கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுமார் 2.32 கி.மீ நீளமுள்ள இந்த பாலம் தான் இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலம் என தெரிவிக்கப்படுகின்றது

குஜராத்தில் உள்ள துறைமுக நகரமான ஓகாவையும் பயத் துவாரகா தீவையும் இணைக்கும் பாலத்தின் மொத்த நீளம் 2.3 கி.மீ. பயட் துவாரகா தீவில் உள்ள கிருஷ்ணருக்கு கட்டப்பட்ட புகழ்பெற்ற துவாரகா கோயிலுக்கு செல்வதற்கு வசதியாக இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

சுதர்சன் சேது ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இதில் ஸ்ரீமத் பகவத் கீதையின் வசனங்கள் மற்றும் இருபுறமும் பகவான் கிருஷ்ணரின் படங்களால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதையை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச அதிகாரிகளுக்குப் புதிய டிஜிட்டல் முறைமை: இன்று முதல் ஆன்லைனில் சொத்து விபரங்களைப் பதிய உத்தரவு!

இலங்கையில் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது சொத்து மற்றும் கடன் விபரங்களைச் (Assets...

Untitled 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உணவுப் பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு.

நாடு முழுவதும் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் முக்கிய உணவுப் பொருட்களின் விலைகளை...

Untitled 60
உலகம்செய்திகள்

சர்வதேச விதிகளை மீறும் செயல்: இஸ்ரேலின் மரண தண்டனைச் சட்டத்திற்கு ஐநா கடும் கண்டனம்!

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கான மரண தண்டனைச் சட்டம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், அதனை...

Untitled 59
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்: பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை வழங்க அனுமதி!

இஸ்ரேலியர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகளாகக் காணப்படும் பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை (Death Penalty)...