24 65fed12fcd7e1
உலகம்செய்திகள்

வெங்காய ஏற்றுமதி தடையை காலவரையின்றி நீட்டித்த இந்தியா

Share

வெங்காய ஏற்றுமதி தடையை காலவரையின்றி நீட்டித்த இந்தியா

வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கான தடையை இந்திய அரசு நீட்டித்துள்ளது.

மார்ச் 31-ஆம் திகதி வரை விதிக்கப்பட்ட வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

உலகின் மிகப்பாரிய வெங்காய ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது. ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டதால் உள்ளூர் விலை பாதியாக குறைந்துள்ளது.

இந்த சீசனில் புதிய விளைபொருட்கள் வருவதால் இந்த தடை அகற்றப்படும் என வியாபாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், சமீபத்தில் மீண்டும் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது இந்திய அரசு.

மறு உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், மத்திய அரசின் இந்த முடிவுக்கு வியாபாரிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

வெங்காயத்தின் மிகப்பாரிய உற்பத்தியாளரான மகாராஷ்டிராவின் சில மொத்த விலை சந்தைகளில் வெங்காயத்தின் விலை டிசம்பர் மாதத்தில் 100 கிலோவுக்கு ரூ.4,500 முதல் ரூ.1,200-ஆக குறைந்தது.

ஏப்ரல் 19 முதல் ஏழு வாரங்களுக்கு நாட்டில் பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

பங்களாதேஷ், மலேசியா, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இந்தியாவில் இருந்து இறக்குமதியை நம்பியுள்ளன. மத்திய அரசின் தடையை அடுத்து, அந்தந்த நாடுகளில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...