tamilni 193 scaled
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் தேர்தலில் எதிர்பாராத முடிவுகள்., இம்ரான் கான் ஆதரவு சுயேச்சைகள் முன்னிலை

Share

பாகிஸ்தான் தேர்தலில் எதிர்பாராத முடிவுகள்., இம்ரான் கான் ஆதரவு சுயேச்சைகள் முன்னிலை

பாகிஸ்தான் தேசிய சட்டசபை தேர்தலில் எதிர்பாராத முடிவுகள் வர வாய்ப்புகள் உள்ளன.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

சுயேட்சைகள் ஆச்சர்யப்படும் வகையில் எழுச்சி பெறுவதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

இம்ரானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சி (Pakistan Tehreek-e-Insaf) சில இடங்களில் போட்டியிடவில்லை. ஆனால் அக்கட்சியின் ஆதரவுடன் சுயேச்சைகள் முன்னிலை வகிக்கின்றனர்.

பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இதுவரை 13 முடிவுகளை அறிவித்துள்ளது. அதில், ஐந்து இடங்களில் இம்ரான் ஆதரவாளர்கள் வெற்றி பெற்றனர்.

நவாஸ் ஷெரீப்பின் Pakistan Muslim League (N) கட்சி நான்கு இடங்களிலும், Pakistan Peoples Party (PPP) நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றன.

நாடு முழுவதும் மொத்தம் 266 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. 134 இடங்களில் வெற்றி பெற்ற கட்சி பாகிஸ்தானில் ஆட்சி அமைக்கும்.

60 இடங்கள் பெண்களுக்கும், பத்து இடங்கள் சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் சட்டசபையில் 296 இடங்களும், சிந்து சட்டசபையில் 130 இடங்களும், கைபர் பக்துன்க்வாவில் 113 இடங்களும், பலுசிஸ்தானில் 51 இடங்களும் அறிவிக்கப்பட உள்ளன.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...