24 663dd7d6735fe
உலகம்செய்திகள்

அதிகரித்துவரும் புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை: ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க சுவிட்சர்லாந்து திட்டம்

Share

அதிகரித்துவரும் புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை: ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க சுவிட்சர்லாந்து திட்டம்

சுவிட்சர்லாந்துக்கு வரும் புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அவர்களுக்காக அரசு செய்யும் செலவும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

ஆகவே, புகலிடக்கோரிக்கையாளர்களையும் வருத்தாமல், செலவையும் மிச்சம்பிடிக்கும் வகையில் சுவிஸ் அரசு சில திட்டங்களைத் தீட்டிவருகிறது.

புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக செய்யப்படும் செலவு கைமீறிப்போகாமல் இருப்பதற்காக நேற்று சுவிஸ் அமைச்சர்கள் சில திட்டங்களுக்கு ஒப்புதலளித்துள்ளார்கள். அவற்றில் ஒன்று, புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிப்பதன்மூலம், 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் 54 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை மிச்சம் பிடிக்கும் திட்டமாகும்.

மேலும், சுவிட்சர்லாந்தில் protection status S என்னும் பாதுகாப்பு நிலை பெற்றுள்ளவர்களை பணிக்கமர்த்தவும் திட்டமிடப்பட்டுவருகிறது. இதன் மூலம் நாட்டுக்கும் வருவாய் கிடைக்கும், புலம்பெயர்ந்தோருக்கும் வருவாய் கிடைக்கும்.

மொத்தத்தில், இத்தகைய நடவடிக்கைகள் மூலம், 2028 வாக்கில் 650 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் வரை மிச்சம் பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...

04 22
உலகம்செய்திகள்

மழைக்கும் மத்தியிலும் ஈரான் தலைநகரில் பிரம்மாண்டப் போராட்டம்: உச்சத் தலைவருக்கு ஆதரவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் இன்று (மார்ச் 24, 2026)...

03 23
செய்திகள்இலங்கை

சீமெந்து விலை 2,250 ரூபாவாக அதிகரிப்பு: கட்டுமாணத் துறை மேலும் நெருக்கடி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக, கட்டுமாணப் பொருட்களின் விலைகள் மீண்டும்...