24 663dd7d6735fe
உலகம்செய்திகள்

அதிகரித்துவரும் புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை: ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க சுவிட்சர்லாந்து திட்டம்

Share

அதிகரித்துவரும் புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை: ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க சுவிட்சர்லாந்து திட்டம்

சுவிட்சர்லாந்துக்கு வரும் புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அவர்களுக்காக அரசு செய்யும் செலவும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

ஆகவே, புகலிடக்கோரிக்கையாளர்களையும் வருத்தாமல், செலவையும் மிச்சம்பிடிக்கும் வகையில் சுவிஸ் அரசு சில திட்டங்களைத் தீட்டிவருகிறது.

புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக செய்யப்படும் செலவு கைமீறிப்போகாமல் இருப்பதற்காக நேற்று சுவிஸ் அமைச்சர்கள் சில திட்டங்களுக்கு ஒப்புதலளித்துள்ளார்கள். அவற்றில் ஒன்று, புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிப்பதன்மூலம், 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் 54 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை மிச்சம் பிடிக்கும் திட்டமாகும்.

மேலும், சுவிட்சர்லாந்தில் protection status S என்னும் பாதுகாப்பு நிலை பெற்றுள்ளவர்களை பணிக்கமர்த்தவும் திட்டமிடப்பட்டுவருகிறது. இதன் மூலம் நாட்டுக்கும் வருவாய் கிடைக்கும், புலம்பெயர்ந்தோருக்கும் வருவாய் கிடைக்கும்.

மொத்தத்தில், இத்தகைய நடவடிக்கைகள் மூலம், 2028 வாக்கில் 650 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் வரை மிச்சம் பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...