7 12 scaled
உலகம்செய்திகள்

கனடாவில் புலம்பெயர்ந்தோரை கைதிகளுடன் சிறையில் அடைக்கும் விவகாரத்தில் முக்கிய திருப்பம்

Share

கனடாவில் புலம்பெயர்ந்தோரை கைதிகளுடன் சிறையில் அடைக்கும் விவகாரத்தில் முக்கிய திருப்பம்

புலம்பெயர்ந்தோரை, குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கும் விவகாரம் தொடர்பில், கனேடிய நீதிமன்றம் ஒன்று முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது.

கனடாவில், 2016ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடையில் மட்டும், 8,360 புலம்பெயர்ந்தோர் கனடாவின் எல்லை பாதுகாப்பு ஏஜன்சியால் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

அப்படி அவர்கள் குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கப்படுவதை எதிர்த்து, பெடரல் அரசுக்கு எதிராக வழக்குத் தொடர ஒன்ராறியோ நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

புலம்பெயர்ந்தோர், குற்றவாளிகளைப் போல குற்றவாளிகளுடன், கைவிலங்கிடப்பட்டு, ஆடைகளைக் களைந்து சோதனையிடப்பட்டு, எங்கும் செல்லவோ, யாரையும் சந்திக்கவோ கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கொடூரமான குற்றம் செய்தவர்களுடன் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறியுள்ளார் நீதிபதி Benjamin Glustein.

அப்படி இந்த புலம்பெயர்ந்தோர் வழக்குத் தொடர்வதைத் தடுப்பதற்காக, பெடரல் அரசு சார்பில் சட்டத்தரணிகள் 15 எதிர்ப்புகள் அல்லது மறுப்புகள் தெரிவித்த நிலையில், அவற்றை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...